ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேச்சு
புதிதாக கண்டுபிடிக்கப்படும் அறி வியல் தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) இங்கர்சால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்ட மைப்பு, செஸ்டாட்ஸ் அமைப்பு ஆகிய வை இணைந்து புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி யில் 32 ஆவது மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. 10 வயது முதல் 17 வயது பள்ளிக் குழந்தைகளின், நீடித்த பாது காப்பான நீர் மேலாண்மை என்ற தலைப் பில் மாநிலம் முழுவதும் 24,000 மாண வர்களால் 12,000 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், தேர்வு செய்யப்பட்ட 536 கட்டுரைகள் மண்டல அளவில் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில மாநாட்டில் 250 மாணவர்கள் 125 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த னர். 30 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 34 ஆய்வுக் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாகத் தேர்வு செய்யப்பட்டன.
சிறந்த கட்டுரைகளை முன்வைத்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ் ஞானி இங்கர்சால் சிறப்புரையாற்றி னார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இங்கே மாணவர்கள் பிரமிக்கத்தக்க வகையில் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து இருக்கிறார்கள். வருங்காலத்தில் நிச்ச யம் வியத்தகு சாதனைகளைப் படைப் பார்கள். அறிவியல் கண்டு பிடிப்புகளை, தொழில்நுட்பங்களை அனைத்து மக்களுக்கும் சமமாக, பாரபட்சமின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். எந்த வகையிலும் அவற்றில் பாரபட்சம் காட்டக் கூடாது. அறிவியல் மக்களை இணைக் கக் கூடியதாக இருக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியை சுய வளர்ச்சிக்கோ, மூடநம்பிக்கையைப் பரப்புவதற்கோ பயன்படுத்தக்கூடாது.
வரும் 2030-க்குள் சந்திரனிலும், 2040-க்குள் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் கால்பதிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கே உள்ள மாணவர்களாகிய உங்களில் யாரேனும் நிலவிற்கோ, செவ்வாய்க் கிரகத்திற்கோ செல்லும் வாய்ப்பு அமையலாம்” என்றார் இங்கர்சால். சிறப்பு அமர்வுகளில் பறவையியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கிருபா நந்தினி, பேரா.எஸ்.மோகனா, எல்.நாராயணசாமி, கல்வியாளர் அ.அமலராஜன், சுரேஷ்குமார் ஆகி யோர் குழந்தைகளுடன் கலந்துரை யாடினார்கள். அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேரா. எஸ்.மோகனா, பூச்சி யியல் விஞ்ஞானி எஸ்.தினகரன், கணித அறிவியல் மையத்தின் விஞ் ஞானி ஓய்வு பெற்ற பேரா.ஆர்.ராமா னுஜம், அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். நிறைவு விழாவிற்கு, அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் தா.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன், வரவேற்பு குழுத் தலைவர் ஆர்.ராஜ்குமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் சாந்தி, மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் எம். எஸ். முகமது பாதுஷா நிறைவுரை யாற்றினார். அவர் பேசும் போது, வரும் மார்ச் 22 ஆம் தேதி உலகத் தண்ணீர் தினத்தில், மாநிலம் முழுவதும் 500 இடங்களில் தண்ணீரைப் பாது காப்போம் என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரி வித்தார். முன்னதாக மாவட்டச் செயலர் எம்.வீரமுத்து வரவேற்க, மாவட்டப் பொருளாளர் விமலா நன்றி கூறினார்.