சென்னை,டிச.19- புதிய ஓய்வூதிய திட்டத்தினையும் புதிய கல்விக்கொள்கையினை யும்திரும்ப பெற வேண்டுமென இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்கென புதுதில்லியில் மார்ச் 6 ஆம் தேதி தேசிய அளவி லான கல்விக்கருத்தரங்கம் நடத்திட வும் தீர்மானித்துள்ளது. தெலுங் கானா மாநில தலைநகர் ஹைதரா பாத் மாநகரில் சுந்தரய்யா விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 8 வது தேசிய மாநாட் டினை மே மாதம் விஜயாவாடாவில் நடத்துவது என்றும் தேசிய அளவி லான மகளிர் மாநாடு நடத்துவது. ஜனவரி மாதம் தொழிற் சங்கங்களின் சார்பில் நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிப்பது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அசாம், மேற்குவங்கம், ஒடிசா, ஹரியானா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப், பீகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, தில்லி, உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்த தகவலை பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.மயில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.