தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்துக் கட்டவும், சாதியற்ற சமத்துவ சமூகத்தை படைத்திடவும் பட்டியலின-பழங்குடி மக்கள் உரிமை மீட்பு மாநாடு செவ்வாயன்று விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டி செங்கொடி தோரணங்களும் பிளக்ஸ் பேனர்களும் நகரையே செம்மயமாக்கியது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களும் கோரிக்கை முழக்கங்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதி மத வித்தியாசம் இல்லாமல் அணி அணியாக திரண்டதால் நகராட்சி திடல் செங்கடலாக காட்சியளித்தது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், கே.சுவாமிநாதன், வெ.ராஜசேகர். பா.ஜான்சிராணி, பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார் (திருவண்ணாமலை), சி.சங்கர் (காஞ்சிபுரம்), குமார் (தருமபுரி), மாதவன் (கடலூர்), நஞ்சுண்டன் (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதன் சுருக்கமான தொகுப்பு.