tamilnadu

img

உரங்களின் தட்டுப்பாடும் கட்டுப்பாடும்

2025இன் இறுதிக்குள் யூரியா உற்பத்தி யில் இறக்குமதி சாராமலே தன்னி றைவு பெற்றுவிட வேண்டும் என  இந்தியா இலக்கு வைத்துள்ளது. அண்டை நாடான இலங்கையில் பசுமை பொருளாதாரம் என்ற பெயரில் இரசாயன உரங்களை தடை செய்ய ஜனாதிபதி கோத்த பய ராஜபக்ச கடந்த ஆண்டு எடுத்த தீர்மானத்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு 50 சதவீதம் பயிர் இழப்பு ஏற்பட்டது. அதனை சமாளிக்க, இலங்கை கேட்டுக் கொண்டதின் பேரில், மே-ஆகஸ்ட் மாதங்களில் நெல்  பயிரிட உதவியாக நீண்டகால கடனாக 65 ஆயிரம் மெட்ரிக்  டன்  யூரியாவை வழங்கிட இந்தியா உறுதிய ளித்திருந்தது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து யூரியா ஏற்றுமதி செய்ய உள்ள தடையையும் மீறி 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ கத்தில் யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. “காலத்தே பயிர் செய்” யலாம் என முயற்சிக்கும் விவசாயிகள் உரங்கள் தட்டுப் பாட்டால் நிலைகுலைந்து போயுள்ளனர். விதைப்புக்கு முன் நிலத்தை தயார் செய்வதிலும் விதைப்புக்கு பின் பயிர்களின் வளர்ச்சியை பராமரிப்பதிலும் யூரியா முக்கிய இடுபொருளாக பயன்படுத்தப்படுகிறது. சில கடைகளில் இருப்பில் இருந்தாலும் யூரியாவை மட்டும் தனியாக விற்பனை செய்ய மறுத்து மற்ற உரங்க ளுடன் சேர்த்து மட்டுமே விற்பனை செய்ய முடியும் என உரக்கடைகள் கட்டுப்பாடு விதிப்பது விவசாயி களை மேலும் வதைக்கும் விதமாக உள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளை நிராகரித்து, சம்பா பருவத்திற்கு நாடு முழுவதும் யூரியா, டிஏபி உள்ளிட்ட முக்கிய உரங்கள் போது மான அளவில் இருப்பதாக ஒன்றிய அரசு வெள்ளிக்கிழமை(18.11.2022) தெரிவித்துள்ளது. திருச்சி, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் உரம் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்  உண்மைக்கு அப்பாற்பட்டவை என்று உர அமைச்ச கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப உரங்க ளை அனுப்புகிறது எனவும் மேலும் மாவட்டங்க ளுக்குள் விநியோகம் மற்றும் மாவட்டங்களுக்கு இடை யேயான விநியோகம் மூலம் மாநிலத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள் ளது. மாநில வேளாண்மைதுறை அதிகாரிகள், தமிழ கத்தில் யூரியா பற்றாக்குறை இல்லை என மறுத்துள்ள னர். ஆனால் விநியோகத்தில் ஏற்படும் கோளாறுக ளால் கிராம அளவில் சிரமங்களை ஏற்படுத்தியிருக்க லாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  

உரங்கள் கட்டுப்பாட்டு ஆணை 1985:

உரங்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவ தற்கும், உரங்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள உரங்கள் கட்டுப்பாட்டு ஆணை(The fertilizer act) 1985-இன் படி,  1) உற்பத்தியாளர், இறக்குமதியாளர், உர நிறுவ னங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு ஒன்றிய அரசு விலையை தீர்மானிக்கிறது. 2)உள்ளூர் நிலைமைகள், உரங்களின் சேமிப்புக்காலம் மற்றும் பிற காரணங்களால் உரங்களுக்கு வெவ்வேறு விலை கள் அல்லது விகிதங்களை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யலாம்.  3)அரசு நிர்ணயித்த விலை அல்லது விகிதத்தை விட அதிகமாக எந்த விற்பனை நிறுவனமும் விற்பனை செய்யவும் விற்பனைக்கு வழங்கவோ கூடாது.  4)எந்தவொரு உரத்தையும் சில்லரை விற்பனை செய்யும் வியாபாரி தனது வணிக இடத்தில் உரங்களின் இருப்பு நிலை மற்றும் விலைப்பட்டியலை காட்சிப் படுத்த வேண்டும். 

வணிக ரீதியான வன்முறை

நடைமுறையில் முறையான விதிகள் வியாபாரி களால் பின்பற்றப்படாததாலும், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் கண்காணிக்காமல் இருப்பதாலும் கடைகளில் உரங்கள் இருப்பு குறித்த உண்மை நிலவரம் விவசாயி களுக்குத் தெரிவதில்லை. இதனால் தங்களுக்குத் தேவையான உரங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்ற னர். சில வியாபாரிகள் மற்ற பொருட்களுடன் சேர்த்து  வாங்கினால் மட்டுமே யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்களை விற்பனை செய்வோம் என விதிக்கிற கட்டுப் பாடுகளால் செய்வதறியாது தவிக்கின்றனர். தேவைப்படுகிற பொருளை இருப்பு வைத்துக் கொண்டே இல்லையென மறுப்பதும், தேவைப்படாத பொருளையும் சேர்த்து வாங்கியே தீர வேண்டும் என நிர்ப்பந்திப்பதும் ஒரு வகையில் பார்த்தால் வணிக ரீதியான வன்முறை ஆகும். மேலும் தட்டுப்பாடு இல்லை  என ஒன்றிய அரசும், விநியோகத்தில் தான் கோளாறு என மாநில அரசும் தெரிவித்துள்ள நிலையில் இத்த கைய செயற்கையான தட்டுப்பாட்டை சந்தையில் ஏற் படுத்துகிற வியாபாரிகளின் அணுகுமுறை சரியான தல்ல. எனவே இது தொடர்பாக மாநில அரசு விவசாயி களின் துயர் துடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வரத.வசந்தராஜன், நன்னிலம்