மதுரையில் நடக்கும் கள்ளழகர் விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை தலையிட தயாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் சவால் விடுத்துள்ளார்.
சிபிஎம் 23 வது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசுகையில், " வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது போல் சிவப்பு நதி மதுரையில் பெருக்கெடுத்து ஒடியது. பெட்ரோல்’டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் வருடம் தோறும் ஏழை’எளிய மக்கள் ரூ.10 ஆயிரம் இழந்து ஏழைகளாகிறார்கள். கேஸ் விலை உயர்வின் மூலம் வருடத்திற்கு ரூ. ஆயிரம் இழந்து ஏழைகளாகிறார்கள்.
பாஜக மிருகத்தனமாக செயல்படுகிறது. விவசாயிகளின் விளை நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பது. அவர்களிடமே நிலம் விற்ற விவசாயிகளை அடிமையாக்குவது என்ற முடிவில் தான் வேளாண் விரோத சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் விவசாயத்தை மட்டும் பறிக்கவில்லை. விளைபொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் பறிக்கிறது
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துகிறது. உழைப்பாளி மக்களின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை. மோடி அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடினார்களோ, அதைப்போல் ஒவ்வொரு பிரச்சனையின் அடிப்படையிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடி வெற்றி பெறுவார்கள். அந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தும்.
பாமக தலைவர் உழைப்பாளி மக்களின் வேலை நிறுத்தம் தேவையில்லாதது என்கிறார். அவரது நிலையை எண்ணி வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் மீது கோபம் கொண்டு சிலிர்த்தெழுந்து தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராடிய 25 கோடி தொழிலாளர்களைப் பற்றி பாமக கவலைப்படவில்லை.
கள்ளழகர் விழாவில் தலையிட தயாரா அண்ணாமலை
மதவாத-சாதிய வாத அரசியலை பாஜக நடத்தி வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார். அடுத்த மாதம் மதுரையில் சித்திரைத்திருவிழா நடைபெறுகிறது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக கள்ளழகர் துலுக்க நாச்சியார் வீட்டிற்குச் செல்கிறார். மதவெறி அரசியல் நடத்தும் பாஜக அழகரை துலுக்க நாச்சியார் வீட்டிற்குச் செல்லாதே எனத் தடுக்க முடியுமா? என்றார்.
மதுரையில் நடக்கும் கள்ளழகர் விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை தலையிட தயாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் சவால் விடுத்துள்ளார்.
சிபிஎம் 23 வது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசுகையில், " வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது போல் சிவப்பு நதி மதுரையில் பெருக்கெடுத்து ஒடியது. பெட்ரோல்’டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் வருடம் தோறும் ஏழை’எளிய மக்கள் ரூ.10 ஆயிரம் இழந்து ஏழைகளாகிறார்கள். கேஸ் விலை உயர்வின் மூலம் வருடத்திற்கு ரூ. ஆயிரம் இழந்து ஏழைகளாகிறார்கள்.
பாஜக மிருகத்தனமாக செயல்படுகிறது. விவசாயிகளின் விளை நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பது. அவர்களிடமே நிலம் விற்ற விவசாயிகளை அடிமையாக்குவது என்ற முடிவில் தான் வேளாண் விரோத சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் விவசாயத்தை மட்டும் பறிக்கவில்லை. விளைபொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் பறிக்கிறது
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துகிறது. உழைப்பாளி மக்களின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை. மோடி அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடினார்களோ, அதைப்போல் ஒவ்வொரு பிரச்சனையின் அடிப்படையிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடி வெற்றி பெறுவார்கள். அந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தும்.
பாமக தலைவர் உழைப்பாளி மக்களின் வேலை நிறுத்தம் தேவையில்லாதது என்கிறார். அவரது நிலையை எண்ணி வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் மீது கோபம் கொண்டு சிலிர்த்தெழுந்து தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராடிய 25 கோடி தொழிலாளர்களைப் பற்றி பாமக கவலைப்படவில்லை.
கள்ளழகர் விழாவில் தலையிட தயாரா அண்ணாமலை
மதவாத-சாதிய வாத அரசியலை பாஜக நடத்தி வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறார். அடுத்த மாதம் மதுரையில் சித்திரைத்திருவிழா நடைபெறுகிறது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக கள்ளழகர் துலுக்க நாச்சியார் வீட்டிற்குச் செல்கிறார். மதவெறி அரசியல் நடத்தும் பாஜக அழகரை துலுக்க நாச்சியார் வீட்டிற்குச் செல்லாதே எனத் தடுக்க முடியுமா? என்றார்.