மதுரை:
சாத்தான்குளம் காவல்துறையினரால் வணிகர்களான தந்தை-மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நவம்பர்11-ஆம் தேதி தொடங்குகிறது என்று சிபிஐ, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெய ராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் கணேஷ், காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், “சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தசம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுதற்போது வரை சிறையில் இருக்கிறோம்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின்
உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையி னர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது.
எங்களுக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.இந்த வழக்கு செவ்வாயன்று நீதிபதி இளஞ்செழியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவார்கள். வழக்கில் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தங்களுக்கு ஜாமீன்வழங்க வேண்டும் என வாதிட்டனர்.சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர் .இவர்கள் தான் தந்தை, மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சிபிஐ விசாரணையிலும் ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கியக் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்குவிசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நவம்பர் 11-ஆம் தேதி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.