tamilnadu

img

நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் தாம்பரம் மாநகராட்சி தீர்மானம்

சென்னை, நவ. 30 - சென்னை குரோம்பேட்டை நியூ  காலனி பகுதிக்கு தோழர் என்.சங்க ரய்யா பெயர் சூட்டும் தீர்மானத்தை தாம்பரம் மாநகராட்சி ஒருமனதாக நிறைவேற்றியது. தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டம் வியாழனன்று (நவ.30) மேயர்  வசந்தகுமாரி தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் 2வது மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை (திமுக) சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். “தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற  விடுதலைப் போராட்ட வீரரும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக் க்காக பாடுபட்டவருமான என்.சங்க ரய்யா நவ.15 அன்று காலமானார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 15.07.1922-ம் ஆண்டு பிறந்து பள்ளி படிப்பை முடித்து, 1937ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். மாணவ பருவத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திலும், விடுதலை போரிலும் தீரத்துடன் பங்கேற்ற தலைவராக அவர் விளங்கினார். 1940ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று கைது செய்யப்பட்டார். தேர்வுக்கு 15 நாட்கள் இருந்த நிலையில் கைது செய்யப் பட்டு வேலூர் சிறையிலடைக்கப்பட்டார். 1942ல் தனது 21 வது வயதில் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட செயலாளரானார். விடுதலைப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறை யிலும், 3 ஆண்டுகள் தலைமறைவாக வும் இருந்துள்ளார். கலை, இலக்கி யத்தில் அதிக ஆர்வமுடையவராக வும், முற்போக்கு சிந்தனையாளர் மற் றும் எழுத்தாளராகவும் இருந்துள்ளார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தது. சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். சாதி, மத மறுப்பாள ரான அவர், கிறி ஸ்துவ மதத்தை சேர்ந்த நவமணி யை காதல் திரு மணம் செய்து கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சாதி,  மத மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர், சமு தாயத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழு வதும் பாடுபட்ட என்.சங்கரய்யா, குரோம் பேட்டை நியூகாலனியில் 40 ஆண்டு காலமாக வாழ்ந்தவர். அவருக்கு தமி ழக முதல்வர் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளித்துள்ளார். எனவே, நியூகாலனி பகுதியை சங்கரய்யா நகர் என்று பெயர் மாற்றம்செய்ய வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தி னார். இதனையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.