tamilnadu

மணல்கொள்ளை: திருநெல்வேலி ஆட்சியரை துளைத்தெடுத்த நீதிமன்றம்

மதுரை:
மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?  என திருநெல்வேலி  ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

திருநெல்லி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் எம்-சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று சட்டவிரோத மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆகியோர் காணொலி வழி யாக நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், எம்-சாண்ட் குவாரிக்குஅனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து நீதிபதிகள், பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்தளவுக்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்
வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? பல்லாயிரம் டன் மணல் கொள்ளை நடைபெற்றது தெரிகிறது.இவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்? இவ்வளவு பெரியளவில் மணல் கொள்ளைநடைபெற வருவாய், காவல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருப் பார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எவ்வளவு டன் மணல் கொள்ளையடிக் கப்பட்டது? மணல் கொள்ளையில் தொடர்புடைய எத்தனை லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட் டன? எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? அவர்களில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? குண்டர் சட்டத்தில் கைது ய்யப்படாவிட்டால் அதற்கு என்ன காரணம்?மணல் கடத்தலில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவு அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஏன் நடவடிக்க எடுக்கவில்லை? என சரமாரி கேள்வி எழுப்பினர்.நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

;