tamilnadu

கீழ ராஜகுலராமன் கண்மாயில் மணல் கொள்ளை... விருதுநகர் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே கண்மாயை சேதப்படுத்திசட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியவழக்கில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில்,  நான் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தற்போது எங்கள் பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதி மற்றும் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்கள் எங்கள் ஊரில் உள்ள கீழ ராஜ குலராமன் கண்மாயை நம்பியே உள்ளது. இந்தக் கண்மாயின் முழுக் கொள்ளளவான 11 அடியில் தற்பொழுது 3.50 அடி தண்ணீர் உள்ளது. கண்மாய்பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ள ராமராஜ், துணைத் தலைவராக உள்ளசுப்பிரமணி ஆகிய இருவரும் குடிமராமத்து என்ற பெயரில் கரைகளை உடைத்து கண்மாயில் உள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். இவர்கள் தண்ணீரை வெளியேற்றி கண்மாய்க்குள் இருக்கும் மணலை அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் அறுவடைப் பணிகள் பாதிப்பதுடன் தற்பொழுதுவளர்ந்துள்ள பயிர்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.  இருக்கன்குடி பொதுப்பணித்துறை அதிகாரியின் துணையுடன் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது குறித்துவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் விசாரித்து எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

;