tamilnadu

img

எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம் ஒரே தேர்வுக்கட்டணம்: அமைச்சர் பொன்முடி

சென்னை, மார்ச் 18- அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தின் துணைத் தலைவர் ராமசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவா ளர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு, நிரப்ப வேண்டிய காலியிடங்கள் உள்ளிட்டவை குறித்து  ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் பொன்முடி,  எல்லா பல்கலைக்கழகங் களும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து கலந்தாலோசிக்க ப்பட்டுள்ளது. அது தொடர் பாக ஒரு குழு நியமிக்கப் பட்டுள்ளது. அதன் முடிவு கள் ஒரு மாத காலத்தில் அறிவிக்கப்படும். பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்கள் தேர்வுக் கட்டணம் அதிகரித்துள் ளதாக போராடி வருகின்ற னர். பழைய கட்டணமே அவர்களிடமிருந்து வசூ லிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செய லரின் அனுமதி பெற்ற பின்னரே டாக்டர் பட்டம்  வழங்குவது போன்ற நிகழ்வு களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் சட்ட முன்வடிவு தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து சரியான நடவடிக்கை வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அமைச்சர்.