எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது!
எழுத்தாளர் களுக்கு வழங்கப் படும் மிக உயர்ந்த இலக்கிய விருது களில் ஒன்றான ‘பார திய பாஷா’ விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த இலக்கிய வாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘பார திய பாஷா பரிஷத்’ இந்த விருதை அறி வித்துள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாட் டின் மிகச்சிறந்த எழுத்தாளர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018- ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகா தெமி விருதையும் பெற்றுள்ளார். ஞானவாணி விருது, தாகூர் இலக் கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்பட ஏரா ளமான விருதுகளையும் பெற்றவர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், பிரெஞ்சு, இந்தி, வங்காளம், தெலுங்கு, கன்ன டம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட பல் வேறு மொழிகளில் வெளியாகி உள் ளன. இந்நிலையில் தான், எஸ். ராம கிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விரு தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரு துடன், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை யும் வழங்கப்பட உள்ளது. மே 1 அன்று கொல்கத்தாவில் நடை பெறும் விழாவில் எஸ். ராமகிருஷ்ண னுக்கு விருது வழங்கப்படும் என்று பாரதிய பாஷா பரிஷத் தெரிவித்துள் ளது. பெ.சண்முகம் வாழ்த்து இந்நிலையில், விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொலைபேசியில்தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.