tamilnadu

img

8 லட்சம் கனவு இல்லங்கள்!

21 ஆம் நூற்றாண்டிலும் இன்றளவும் கிராமப்புறங்களில் வறுமையின் அடை யாளமாக எஞ்சியிருப்பவை குடிசைகளே. குடிசைகளில் வாழ்ந்திடும் குடும்பங்கள் பாதுகாப்பான நிரந்தர வீடுகளுக்கு இடம்பெயரும் போது, ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தச் சமூகத்தில் சுயமரியாதை யுடன் வாழ வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோள். தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடு கள் அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம்  குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதா கக் கண்டறியப்பட்டுள்ளது என்றார். 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டின் ஊரகப்  பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம்  ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன் றும் ரூ. 3.50 லட்சம் செலவில் உருவாக்கப் படும்.

வீட்டின் வடிவமைப்பை  பயனாளிகளே தேர்வுசெய்யலாம்

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர் களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவது டன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம்  வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும், அறிவியல் பூர்வமான கணக் கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.

25 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இரட்டை காப்பியங்கள்!

தமிழர்களின் ஒற்றுமை, அரசியல் நேர்மை, குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு மற்றும் பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத் துரைக்கும் தமிழின் இரட்டைக்  காப்பியங்களான சிலப்பதிகாரம்,  மணிமேகலை ஆகியவற்றை 25 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. மேலும்,  தமிழ்நாடு பாடநூல் கழகம்  மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள்  வெளியிடப்படும். பழங்குடி மொழி வளங்கள்... தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்டிரா, படுக மொழி களையும் தோடர், கோத்தர், சோளகர், காணி நரக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி யின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களை யும் எதிர்காலத் தலைமையின ருக்குப் பயன்படும் வகையில்  இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கப் படும்.

துறைவாரியாக நிதி ஒதுக்கீடு

*    பள்ளிக்கல்வித்துறை - ரூ.44,042 கோடி
*    உயர்கல்வித்துறை - ரூ.8,212 கோடி
*    நீர்வளத்துறை - ரூ.8,398 கோடி
*    சிறுபான்மையினர் நலத்துறை - ரூ.1,429 கோடி
*    நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை - ரூ.20,043 கோடி
*    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.20,198 கோடி
*    ஆதிதிராவிடர் நலத்துறை - ரூ.3,706 கோடி
*    ஜவுளி மேம்பாட்டுத் துறை - ரூ.500 கோடி
*    இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டு துறை - ரூ.440 கோடி
*    மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.20,198 கோடி
*    மகளிர் உரிமைத் தொகை - ரூ.13,720 கோடி
*    ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை  - ரூ.27,922 கோடி
*    நீர்வளத்துறை - ரூ. 8,398 கோடி
*    தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை - ரூ. 4,481 கோடி
*    சமூக நலத்துறை - ரூ.7,830 கோடி
*    மதுரை(6.4 லட்சம் சதுர அடி ) - ரூ.345 கோடி
*    திருச்சி(6.3லட்சம் சதுர அடி ) - ரூ.350 கோடி
*    விடியல் பயணம் - மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு  ரூ.3,050 கோடி
*    காவல்துறை - ரூ. 12,543 கோடி
*    எரிசக்தித்துறை - ரூ.22,310 கோடி