tamilnadu

img

மனிதாபிமானத்தைக்கூட சகித்துக் கொள்ளாத ஆர்எஸ்எஸ் கும்பல்

சபரி மலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு செய்துவிட்டு கேரள தேவசம் (அறநிலையத்துறை) அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு பக்தர் தசை வலியால் அவதிப்படுவதைக் கண்டார். அவரது காலை நீவிக்கொடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப அமைச்சர் அவருக்கு உதவினார்.   இந்த காட்சி கேரளம் முழுவதும் சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் அமைச்சரின் செயலை பாராட்டி பதிவிட்டுள்ளனர். ஆனால் எதிர்மறையான சில பதிவுகளை ஆர்எஸ்எஸ் கைக்கூலிகள் போட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஒருவர், “அந்த மனதை யாரும் பார்க்கத் தவறி விடக்கூடாது...அதிரடியாக ஆய்வு செய்யும் அமைச்சரும், ஐயப்பனுக்கு மலை ஏற உதவும் அமைச்சரும் உள்ள நாடு நமது நாடு” என தெரிவித்துள்ளார்.