கோட்டயம், நவ.2- சபரிமலையில் மண்டல - மகர விளக்கு காலத்துக் கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமை யில் சனிக்கிழமையன்று (நவ. 2) உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோட்டயம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேவ சம்- கூட்டுறவு- துறைமுகத் துறை அமைச்சர் வி.என். வாசவன் கூறிய தாவது: சபரிமலையில் மண்டல - மகர விளக்கு காலத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து உள் ளன. 13 ஆயிரத்து 600 காவல்துறை யினர் பாதுகாப்புப் பணியில் நிய மிக்கப்பட உள்ளனர். இம்முறை நிலக் கல்லில் 10,000 வாகனங்கள் நிறுத்த வச திகள் ஏற்படுத்தப்படும். கடந்த முறை 7500 வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மாத பூஜையின் போது பம்பை, மலை உச்சி மற்றும் சக்குபாலத்தில் வாக னங்களை நிறுத்த நீதிமன்றம் அனு மதி அளித்துள்ளது. இங்கு 2000 வாக னங்கள் நிறுத்த முடியும். எருமேலி யில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான ஆறரை ஏக்கர் நிலம் வாக னங்களை நிறுத்த பயன்படுத்தப்படும். நிலக்கல்லில் 1045 கழிப்பறை களும், பம்பையில் 580 கழிப்பறை களும் கட்டப்படும். பெண்களுக்காக நூறு கழிப்பறைகள் தயார் செய்யப் படும். சன்னிதானத்தில் 1005 கழிப்ப றைகள் அமைக்கப்படும். பாரம்பரிய சாலை மற்றும் சுவாமி ஐயப்பன் வீதி யில் 50-க்கும் மேற்பட்ட பயோ டாய்லெட்கள், பயோ சிறுநீர் கழிப்பி டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப் பட்டது. இம்முறை சன்னிதானத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் தயா ரிக்கப்படவுள்ளது. சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினர் மாளிகை முழு மையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் அனை வருக்கும் சுமூகமான தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். திருவிதாங் கூர் தேவசம் போர்டு இம்முறை சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனை வருக்கும் இலவச காப்பீட்டுத் திட் டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கப்படும். பக்தர்கள் இறந்தால், உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு செய்யும். இவ்வாறு அமைச்சர் வி.என். வாச வன் தெரிவித்துள்ளார்.