திருவாரூரில் ரூ.3 லட்சம் நிதி வழங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு சிறப்பு கருத்தரங்கம் செவ்வாயன்று திருவாரூர் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடை பெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், கட்சி கிளைச் செய லாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் சார்பாக அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கினர். சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியை, மாநாட்டு வரவேற்புக் குழு பொரு ளாளர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு வின் இலக்கை நிறைவு செய்து, மாநாடு நிதி ரூ.3 லட்சத்தை ரொக்கமாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கி னார். கருத்தரங்கத்தில் 300-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.
ஜெயங்கொண்டத்தில் நிதி அளிப்பு கூட்டம்
அரியலூர், மார்ச் 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி செவ் வாயன்று பொது கருத்தரங்கம் மற்றும் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், செந் தொண்டர் அணிவகுப்பானது, ஜெயங் கொண்டம் அண்ணா சிலையில் தொடங்கி சன்னதி தெருவில் மாநாடு கருத்தரங்க பொ துக்கூட்ட அரங்கத்தை வந்தடைந்தது. கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித் தார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி.துரைசாமி, எ.கந்தசாமி, வி. பரமசிவம், டி.அம்பிகா, துரை.அருணன் ஆகியோர் பகத்சிங் நினைவுகளை போற்றி உரையாற்றினர். தொடர்ந்து மாநாட்டு நிதியாக 6 இடைக் கமிட்டிகள் சார்பில் ரூ.2.5 லட்சம், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை யிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சின்னதுரை எம்எல்ஏ சிறப்புரையாற்றி னார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செந்தில்வேல் நன்றி கூறினார்.