பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்க்கு ரூ.1.30 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல!
காஷ்மீரில் முதல்நாள் ஆய்வுக்குப் பின் எம்.ஏ. பேபி பேட்டி
ஸ்ரீநகர், ஜூன் 10- ஜம்மு - காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்த வர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நிர்ண யித்த ரூ.1.30 லட்சம் என்ற இழப்பீடு போது மானதல்ல என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் பின்னணியில், பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூதுக்குழு ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குத லைத் தொடர்ந்து, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காஷ்மீருக்கு ஒரு குழுவை அனுப்ப சிபிஎம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகரித்ததால் காஷ்மீர் பய ணம் ஒத்திவைக்கப்பட்டு, ஒரு மாதத்திற் குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) அன்று தான் தூதுக்குழு காஷ்மீர் சென் றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி., கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் கே. ராதா கிருஷ்ணன், மாநிலங்களவைத் தலைவர் ஜான் பிரிட்டாஸ், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சு. வெங்கடேசன் மற்றும் ஏ.ஏ. ரஹீம் ஆகி யோர் குழுவில் இடம்பெற்றுள்ள நிலை யில், ஸ்ரீநகரில் கட்சியின் ஜம்மு - காஷ்மீர் மாநிலச் செயலாளர் முகமது அப்பாஸ் ராதர், தூதுக்குழுவினரை வரவேற்றார். அதைத்தொடர்ந்து, செவ்வாயன்று காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தூதுக்குழுவினர், எல்லையோர பகுதி களில் பாகிஸ்தான் குண்டுவீச்சு தாக்கு தலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார் வையிட்டனர். அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து உரையாடினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னரும்- காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினரு மான முகமது யூசுப் தாரிகாமியும் உடன் சென்றார். இந்த ஆய்வுகளுக்குப் பிறகு, பய ணக்குழுவிற்கு தலைமையேற்றுச் சென்றுள்ள கட்சியின் பொதுச்செயலா ளர் எம்.ஏ. பேபி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். “பாகிஸ்தான் தாக்குதலில் முழுமை யாக வீடுகளை இழந்தவர்களுக்கு- புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ள ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என்ற தொகை போது மானதாக இல்லை” என்று கூறினார். “ஜம்மு - காஷ்மீரின் அனைத்து அதிகா ரங்களையும், பிரதமர் நரேந்திர மோடி யும், உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் தான் கையில் வைத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக தர மிறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கும் மாநில அரசுக்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளன. அவ்வாறிருக்கையில், எல்லைக்கு அப்பால் இருந்து வரும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசுதான். பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும்” என்றும் எம்.ஏ. பேபி கோரி னார். புதன்கிழமையன்றும் பயணத்தைத் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குழுவினர், ஸ்ரீநகரில் பல்வேறு அர சியல் கட்சித் தலைவர்கள் மற்றும் குடி மைத் தலைவர்களையும் சந்திக்கின்றனர். ஸ்ரீநகரில் உள்ள தாகூர் ஹாலில் கட்சி ஊழியர்களுக்கான சிறப்பு மாநாட்டிலும் கலந்து கொள்கின்றனர்.