tamilnadu

கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல்

சென்னை,மார்ச் 2- இந்து சமய அறநிலைய த்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கணினி வழியாக திருக்கோயில் களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல்  செய்யப்பட்ட 10 முக்கிய மான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.4.28 கோடியும், பழநி,  தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.3.23 கோடியும், சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோவி லில் ரூ.2.05 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.1.79 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.1.43 கோடி யும், திருச்சி, மலைக் கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.1.39 கோடி யும், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் ரூ.1.26 கோடியும், திருவாரூர், திருத் துறைப்பூண்டி பிறவிமருந் தீஸ்வரர் கோவிலில் ரூ.1.24 கோடியும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் ரூ.1.16 கோடியும், காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் ரூ.1.15 கோடியும் இதுவரை வசூ லிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.