tamilnadu

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நீலகிரி,ஜன.28- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே  கோடநாடு பகுதியில், மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா வுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து  காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.  பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. கொரோனா பரவல் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்க ளில் நேரடி  விசாரணை ரத்து செய்யப்பட்டது. ஆன்லைனில் முக்கிய வழக்குகள் விசாரணை மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த  நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை யில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் சென்னையிலிருந்து ஆன்லை னில் விசாரணைக்கு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.