சென்னை, மார்ச் 16- சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டம் 2014ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையரை சந்தித்து மனு அளிக்கப் பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சங்கங்களின் தொடர் போராட் டங்களினாலும், சட்டப் போராட்டங் களினாலும் ஒன்றிய அரசு சாலை யோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014-ஐ இயற்றியது. தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு சட்ட விதிகளை உருவாக்கி அமல் படுத்தியது. இருப்பினும், இச்சட்டம் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையாக அமலாக வில்லை. எனவே, இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்திடவும், சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள்
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனைக் குழு மற்றும் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் ஆலோ சனையைப் பெற்று கணக்கெ டுப்பு நடத்த வேண்டும். சாலை யோர வியாபாரிகளை கணக் கெடுத்து அடையாள அட்டை வழங்க மாநிலத்தில் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கணக்கெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, விரைவாகவும், விடுபடாமலும், கணக்கெடுப்பு நடத்திட மாவட்ட அளவில் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கிய பிறகே விற்பனைக் குழுவிற்கான தேர்தலை நடத்த வேண்டும்.
விற்பனைக் குழுவிற்கான தேர்தலை ஜனநாயக பூர்வமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி யில் நடைபெற்ற தேர்தலை ஜனநாயக பூர்வமாக நடத்தாமல் வேண்டியவர்க ளுக்கு மட்டுமே வேட்பு மனு கொடுத்த னர். மற்றவர்களுக்கு கொடுக்க வில்லை. பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக் கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. எனவே, இதுபோன்ற நிலை இதர நகராட்சிகளில் ஏற்படாமல் தேர்தல் முறையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டிக் கொடுமையிலிருந்து சாலையோர வியாபாரிகள் விடுபட வட்டியில்லா கடனாக கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை அமலாக்க வேண்டும். நகர விற்பனைக் குழுவில் 15இல் 6 இடம் சாலையோர வியாபாரிகள் என்பதை மூன்றில் இரண்டு பங்கு இடம் என மாற்றம் செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டம் 2014 குறித்து காவல்துறை, நகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முறை யான பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இந்த சந்திப்பில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.கருப்பையன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பி னர்கள் எஸ்.சந்தியாகு, தாமஸ், சிஐடியு மாநில துணைத் தலை வர்கள் ஆர்.தெய்வராஜ், எஸ்.கே.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.