tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாலை அமைக்கும் பணி துவக்கம் 

தஞ்சாவூர், ஜூன் 18-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025-26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு கிழக்குத் தெரு, முடப்புளிக்காடு-2 பிட், தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.  இதற்கான பணியை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின்  கற்றல் திறன் ஆய்வு

அறந்தாங்கி, ஜூன் 18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, “உங்க ளைத் தேடி உங்கள் ஊரில்”  திட்டத்தின் கீழ் குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் ஆய்வு செய்தார். அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் சிவ குமார், தனித்துறை ஆட்சியர்  (சமூக பாதுகாப்பு திட்டம்) ஷோபனா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்த னர்.

சிபிஎம் போராட்டம் அறிவிப்பு: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இடமாற்றம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெருவில் மக்கள் வசிக்கும் பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது,  இதனை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில் அந்த குப்பை கிடங்கு அகற்றப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், குப்பை கிடங்கு அகற்றப்பட்ட இடத்தில் தற்போது துறையூர் நகரப் பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீரை சுத்தப்படுத்தும் நிலையத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதனை கண்டித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தியும்  சிபிஎம் தலைமையில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேர்மனிடம் சிபிஎம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, மக்கள் தன்னெழுச்சியாக செவ்வாயன்று கட்டுமானப் பணியை நிறுத்த கோரி போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களை புதனன்று நகராட்சி அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், நகராட்சி சேர்மன், கமிஷனர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்த், ஒன்றியச் செயலாளர் சங்கிலிதுரை, கட்சி உறுப்பினர்கள் சிவானந்தம், பொன்னுச்சாமி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். “சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற இயக்குநர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்கிறோம். கட்டுமானப் பணி இனி நடக்காது” என பேச்சுவார்த்தையில் அறிவித்தனர்.