tamilnadu

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டக் குழு உதயம்.. மாவட்டச் செயலாளராக பி.சீனிவாசன் தேர்வு....

மயிலாடுதுறை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மயிலாடுதுறை மாவட்டக் குழு உதயமாகியுள்ளது. மாவட்டச் செயலாளராக பி.சீனிவாசன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சமீபத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள் ளது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழுவை, இரு மாவட்டக் குழுக்களாக பிரிப்பது என கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்தது.இதையொட்டி கட்சியின் சிறப்புப் பேரவைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் நவம்பர் 17 செவ்வாயன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி தலைமையேற்றார். பேரவையை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் உரையாற்றினார். கட்சியின் மாநிலக் குழுஉறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர்.

இப்பேரவையில் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு உருவாக்கப்பட் டது. 23 பேர் கொண்ட மாவட்டக் குழுதேர்வு செய்யப்பட்டது. புதிய மாவட்டக்குழு கூடி பி.சீனிவாசனை செயலாளராக தேர்வு செய்தது. அவர் உள்பட, ஜி.ஸ்டாலின், சி.வி.ஆர்.ஜீவானந்தம், எஸ்.துரைராஜ், ஏ.சிங்காரவேலன், பி.மாரியப்பன், டி.கணேசன் ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.பேரவைக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நிறைவுரை நிகழ்த்தினார்.நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் நன்றி கூறினார்.