மதுரை, நவ.28- முதல் 8 வது வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து செய் யப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒன்றிய அமைச்சருக்கு எழு தியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: சிறுபான்மை மாணவர் களுக்கு மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித் தொகை (Pre Matric Scholor ship) இது நாள் வரை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் 8 வது வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 வது வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இனி வழங் கப்படாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்ப தாக அறிந்து அதிர்ச்சி அடைந் தேன். அதற்கான காரண மாக, கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி நடுநிலைக் கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, கட் டாயக் கல்வி வழங்கப்படு வது என சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. எனவே, கல்வி உதவித் தொகை இனி 9 மற் றும் 10-ஆவது வகுப்பு பயி லும் மாணவர்களுக்கு மட் டுமே என அறிவிக்கப்பட்டுள் ளது. நடப்பு ஆண்டு மேற் கண்ட வகுப்புகளுக்கு தரப் பட்டு இருந்த விண்ணப்பங் களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது சிறுபான்மை சமூ கங்களை சார்ந்த ஏழை, அடித்தள மக்களுக்கு பலத்த அடியாகும். இந்த திட்டம் மாணவர்கள்/ பெற்றோர் கள் செலுத்துகிற கட்ட ணங்களை மட்டும் ஈடுகட்டக் கூடியது அல்ல. உங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்திலேயே இந்த திட்டம் பற்றி மிகத் தெளிவான முன் னுரை தரப்பட்டுள்ளது. ‘‘மெட்ரிக்குக்கு முந் தைய கல்வி உதவித் தொகை திட்டம் என்பது பள்ளிக் கூடத்திற்கு தங்கள் குழந் தைகளை அனுப்புவதை ஊக்குவிப்பது ஆகும். அவர் களின் பள்ளிக் கல்விக்கான நிதிச் சுமையை குறைத்து, பள்ளிக் கல்வியை முடிக்க உதவுவது ஆகும். இது அவர் களுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து போட்டி மிக்க வேலைச் சந்தையில் சமதள ஆடுகளத்தை உறுதி செய் வது ஆகும். கல்வி மூலம் அதிகாரப்படுத்தல் என்பது இத்திட்டத்தின் நோக்கங்க ளில் ஒன்று. சிறுபான்மை சமூ கங்களின் சமூக பொருளா தார நிலைமைகளை மேம் படுத்தும் சக்தி கொண்டது’’. இது கல்விக் கட்ட ணத்தை மட்டும் பேசவில்லை. அதன் ஒவ்வொரு வார்த்தை யும் முக்கியமானது. அதன் நோக்கம் மிக விரிந்தது. இருந்தாலும் உங்கள் முடிவு எண்ணங்களுக்கு மாறான தாக அமைந்துள்ளது.
சிறுபான்மை சமூகங் களை சார்ந்த ஏழை, அடித் தள மாணவர்கள் பொரு ளியல், சமூக, கல்வி தளங்க ளில் பின் தங்கியுள்ளனர். அதற்கு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும், பார பட்சங்களும் காரணம். இந்த திட்டங்கள் அம்மக்களின் வாழ்நிலை குறித்த ஆழமான ஆய்வுகளின் பின்புலத்தில் கொண்டு வரப்பட்டன. சச் சார் குழு அதற்கான ஆதார தரவாக அமைந்தது. கல்விக் கட்டணம் தவிர்த்து, பெற்றோர் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, போக்குவரத்து, கல்விச் சுற்றுலா ஆகியன போன்றவற்றிற்கு செலவிட வேண்டியுள்ளது. இலவச உணவுத் திட்டங்கள் அரசுப் பள்ளியில் நடைமுறையில் இருந்தாலும் தனியார் பள்ளி களில் இல்லை. அது போல அரசுப் பள்ளி மாணவர்களும் பிரத்யேக பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள். விளிம்பு நிலைச் சமூ கத்து மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு சமதள ஆடு களத்தை இந்த சமூகம் தர வில்லை என்பதே உண்மை. இதற்கு அரசுதான் ஆதரவு நல்க வேண்டும். அது அரசின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதி. எனவே, கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ காரணம் காண் பித்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை யை திரும்பப் பெறுவது எளிய மக்களுக்கு இழைக் கப்படும் பெரும் அநீதி ஆகும். மேலும் இது கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கையே எட்ட விடாமல் தோற்கடிக்கக் கூடியதும் ஆகும். எனவே, உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். ஆதார, நடு நிலைக் கல்வி முழுமைக் கும் கல்வி உதவித் தொகைத் திட்டம் தொடர்வதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.