கண்ணூர், டிச.1- கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் மறு நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தில்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்துக்குத் திரும்பப் போவதாக கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர். கோபிநாத் ரவீந்திரன் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு வழங்கப்படாது. ஏழாண்டு காலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னால் உழைக்க முடிந்தது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.