விருதுநகர், அக்.31- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆசி ரியர்களுக்கு சிறப்பு நலநிதி யில் வழங்க வேண்டிய நிலு வைத் தொகை ரூ.5 ஆயி ரத்தை வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அலு வலக வளாகத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கா.சிவ பெரமளான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏராளமான ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஜே.ராணி என்பவர் ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகி யும் ஓய்வூதியம் வழங்க வில்லை. இந்தக் கோரிக்கை மீது சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலர் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி விடுதிகளி பணிபுரிந்த ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு பணிப்பதிவேடுகளை வழங்க வேண்டும். மருத்து வக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற ஆசிரி யர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டி லிருந்து வழங்கா மல் உள்ள மருத்தவச் செல வுத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.