tamilnadu

img

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி  ஊழியர்கள் நூதன போராட்டம்

பெரம்பலூர், மே 10-  பெரம்பலூரில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பட்டை நாமமிட்டு மடிபிச்சை ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பால்சாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை, அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆளவந்தார் உட்பட பலர் பேசினர். இதில், தேர்தல் வாக்குறுதியின்படி சிறப்பு பென்சன் ரூ.6 ஆயிரத்து 750 வழங்கவேண்டும், சென்னை ஐகோர் தீர்ப்பின்படி பென்சன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்கவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் சின்னதுரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினா