tamilnadu

img

அரசுப் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை (எஸ்எம்சி) மறு கட்டமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 2024-26 ஆம் ஆண்டு களுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் குழுவில் இடம்பெற்றி ருப்பர். அதில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அலுவலராக இருப்பார். எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 28-ஆம் தேதி நடத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 10, 17-ஆம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.