சென்னை, ஏப்.11- மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.11) கேள்வி நேரம் முடிந்ததும், இளங்கலை படிப்பு களுக்கு பொது நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மா னத்தை முன்மொழிந்து உரையாற் றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மாநிலத்தின் கல்வி உரிமை மீது ஒன்றிய அரசின் தாக்குதல் தொடர் கிறது. பல்கலைக்கழக மானியக் குழு வின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து ஒன்றிய பல்கலைக்கழ கங்களில் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்று அறிவித்து வருகிறது. அந்தத் தேர்வு 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த திட்ட மிட்டு இருக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், “பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் கள் அடிப்படையில் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இளங் கலை படிப்புகளில் மாணவர் சேர்க் கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ‘பீடிகை’ போட்டு ஓர் அறி விப்பை ஒன்றிய அரசின் கீழ் இயங் கக்கூடிய பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரு கிறது” என்றும் தெரிவித்தார்.
தீர்மானம்
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மானியக்குழு 2023-23 ஆம் கல்வி யாண்டு முதல், மானியக் குழுவின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழகத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறி வித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் களை கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என வும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள் ளது.
சமமான வாய்ப்பை வழங்காது
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்காது என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கருதுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் மொத்த மாணவர்களில் 80 விழுக் காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத்தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும் பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையை நம் நாட்டில் உள்ள பல்வேறு ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரி களில் தமிழகத்தைச் சேர்ந்த மாண வர்கள் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேலும் கருதுகிறது. இந்த நுழைவுத் தேர்வும் நீட் தேர்வை போன்றே நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளி களில் நீண்டகாலக் கற்றல் முறை களை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
மாணவர்கள் தங்களது நுழை வுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை நோக்கிச் செல்லும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐய மில்லை.மேலும் மாணவர்களுக் கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதக மாக அமையும் என்றும் தமிழக மக்களிடையே அச்சம் எழுந்திருக் கிறது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக் கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவர்கள் சமுதா யத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். எனவே, மாநில அரசின் உரிமை களை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு நடத்தவிருக்கும் பல்கலைக்கழக நுழைவு தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை இந்த தமிழ்நாடு பேரவை வலியுறுத்துகிறது. என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பாஜக வெளிநடப்பு
இந்தத் தனித் தீர்மானத்தை சட்ட மன்றகுழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றுப் பேசினர். பாஜக மட்டும் மறு பரிசீல னை செய்ய வேண்டும் என்று கூறி யதுடன் அக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு, உரையாற்றிய முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ பாஜக வை தவிர அனைத்து கட்சிகளும் அரசின் தீர்மானத்தை வர வேற்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்ததற்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன்” என்றார். அரசு கொண்டுவந்திருக்கும் இந்த தீர்மானம் தமிழ்நாட்டு மக்க ளின் உணர்வுகளை பிரதிபலிப்ப தாக இருப்பதால், பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எட்டரை கோடி தமிழ் மக்க ளின் சார்பில் ஒன்றிய அரசை தமிழக சட்டமன்றம் மூலம் கேட்டுக் கொள்வதாகவும் கூறிய முத லமைச்சர், தமிழ்நாட்டு மாண வர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், பொது நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலி யுறுத்துவதாகவும் தெரிவித்தார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.