திருவனந்தபுரம், பிப். 2- கேரளத்தில் செங்ஙன்னூர் அருகில் உள்ள பாண்டநாடு முதவழி ஸ்ரீகுமார மங்கலம் சுப்ரமணியசுவாமி கோயில் கோபுரக் கலசத்தை கொள்ளையடித்த வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் எம்.வி.கோபகுமார் மீது பாஜகவினரே குற்றம்சாட்டி முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதில் அப்பாவி களை சிக்கவைத்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2011 அக்டோபர் 19ஆம் தேதி இரவு இந்த கொள்ளை சம்பவத்தை குற்றப் பிரிவின் மறுவிசாரணைக்கு உட்படுத்து மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொள்ளையுடன் தொடர்புடைய பாஜக காங்கிரஸ் தலைவர்களை சட்டத் தின் முன்பு கொண்டுவர வேண்டும் என வும், பாஜக மாவட்டத் தலைவர் எம்.வி.கோபகுமாருக்கு இதில் முக்கிய பங்கு உள்ளதாகவும் புகாரில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை குற்றச் சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பாஜக ஊழியர்களான பி.டி.லிஜு, கீதானந்தன், கே.டி.சஜீஷ், எஸ்.சரத்குமார் ஆகி யோர் அனுப்பியுள்ளனர். இந்த வழக் கில் தங்களை போலியாக சிக்க வைத்துள்ளதாகவும் புகாரில் தெரி வித்துள்ளனர்.
கோயில் உள்ளிட்ட கரயோகத்தின் (சங்கம்) தலைவராக எம்.வி.கோப குமார் உள்ளார். கோபுரக் கலசத்தில் விலைமதிப்பற்ற இரிடியம் உலோகம் இருப்பதாகவும், அதற்கு உலக அளவில் பெரும் மதிப்பு உள்ளதாகவும் கோப குமார் அடங்கிய குழுவினர் தெரிவித்த னர். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறு வனங்கள் கோபுரக் கலசத்தை வாங்க கோடிக்கணக்கான ரூபாய் வழங்க முன்வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோயில் பாதுகாப்புக்காக கரயோ கம் கமிட்டி 10 பேரை காவலுக்கு நிய மித்திருந்தது. கொள்ளை சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு காவலர்கள் விடு விக்கப்பட்டனர். அப்போதைய செங்குன்றம் டி.எஸ்.பி நரேந்திரபாபு தலைமையில் ஆய்வு நடந்தது. கோவி லில் திருட்டு நடக்க வாய்ப்பு இருப்ப தாகவும், இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியும் என்றும் கோப குமாரிடம் எஸ்ஐ ஸ்ரீமோன் கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது குற்றவாளியான சரத்குமார் விசாரணையின்போது நேர்மையான வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள் ளார். கோபகுமார் மற்றும் அவரது நண்ப ரான வழக்கறிஞர் வீட்டிலும், செங்கன் னூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அவ ரது வாக்குமூலத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோபகுமார் குற்றவாளியாக மாற வேண்டிய நேரம் வந்தபோது, அப்போது கேபிசிசி உறுப்பினராக இருந்த கே.என்.விஸ்வநாதன் தலையிட்டார். கோபகுமாரிடம் விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டு, குற்றவாளிகள் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டார். கோப குமாரும், கரயோகமும் அவருக்குச் சொந்தமான குடும்பக் கோயிலை கைப் பற்றினார்கள். கோயிலை மீட்டுத்தரக் கோரி செங்ஙன்னூர் முனிசீப் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இத னால் ஏற்பட்ட பகைமையால் தன்னை குற்றவாளி ஆக்கியதாக சரத்குமார் கூறினார்.