tamilnadu

பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அறிக்கை

கோட்டயம், ஜுன் 23- தொலைதூர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்து வது தொடர்பான பரிந்துரைகளை கேரள அரசிடம் அம்மாநில மகளிர் ஆணையம் ஜுலை 4ஆம் தேதி அறிக்கையாக சமர்ப் பிக்க உள்ளது.  வெளிமாநில பேருந்துகளில் பெண்க ளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த புகார்கள் வந்துள்ள நிலையில் அதன்மீது தலையீடு செய்ததாக மகளிர் ஆணைய உறுப்பி னர்கள் தெரிவித்துள்ளனர். கோட்டயத்தில் நடந்த தீர்வாயத்துக்கு (அதாலத்) பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் மேலும் கூறியதாவது:  பெண் பயணியை சித்திரவதை செய்ய முயன்றது குறித்த வழக்கில் கல்லடா டிரா வல்ஸ் உரிமையாளர் ஜுலை 4 ஆம் தேதி ஆணையத்தின் தலைமையகத்தில் ஆஜ ராக உத்தரவிடப்பட்டுள்ளது.  பொய்யான தகவல் அனுப்பி ரூ.50 ஆயிரம் அபகரித்த முகநூல் நண்பரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தருமாறு ஒரு குடும்பத் தலைவி புகார் அளித்தி ருந்தார். வெளிநாட்டு நிறுவனம் அந்த பெண்மணிக்கு அன்பளிப்பாக அனுப்பிய பொருட்கள் தில்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் சுங்கத்துறையிடமிருந்து விடுவித்து வீட்டில் கொண்டுவந்து ஒப்ப டைப்பதாக கூறி இந்த மோசடி நடந்தது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையின் சைபர் செல் வசம் தீர்வா யத்தில் ஒப்படைக்கப்பட்டது.  தீர்வாயத்தில் 85 வழக்குகள் விசா ரிக்கப்பட்ன. அதில் 17 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன. 7 புகார்கள் கூடுதல் விசா ரணைக்காக காவல்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டன. 31 புகார்கள் ஜுலை எட்டாம் தேதி நடக்கவிருக்கும் தீர்வாயத்தில் பரி சீலிக்கப்படும். கொல்லம் மாவட்ட ஊராட்சி அரங்கில் நடந்த தீர்வாய அமர்வில் மகளிர் ஆணைய உறுப்பினர் இ.எம்.ராதா, ஷிஜி சிவாஜி, ஆணைய இயக்குநர் வி.யு.குரியா கோஸ், ஆணைய கண்காணிப்பாளர் ஒய். ஆனி ஆகியோர் பங்கேற்றனர்.