tamilnadu

மூத்த தோழர் எம்.நாச்சிமுத்து நினைவேந்தல்

மூத்த தோழர் எம்.நாச்சிமுத்து நினைவேந்தல்

ஈரோடு, மே 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினரும், மூத்த தோழருமான எம்.நாச்சிமுத்துவின் முதலாமாண்டு நினைவேந்தல் சனியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாவட்டக்குழு உறுப்பினராகவும், ஈரோடு தாலுகா செயலாளராகவும், அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப் புகளில் திறம்பட பணியாற்றியவர் தோழர் நாச்சிமுத்து. இவரின் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி ஊனாத்திபுதூரில் சனி யன்று, இடைக்கமிட்டி உறுப்பினர் அன்பு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்ர மணியன், மாவட்டக்குழு உறுப்பினர் பா. லலிதா மற்றும் குடும்பத்தார் என திரளா னோர் பங்கேற்றனர். அதேபோல் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று தோழர் எம்.நாச்சிமுத்துவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, நினைவுகளை பகிர்ந்தனர்.