tamilnadu

img

எவர்வின் பள்ளியின் புருஷோத்தமன் எழுதிய ஆசிரியர்களுக்கான நூல்

சென்னை, செப். 6- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வழங்கும் எவர்வின் பள்ளி யின் மூத்த முதல்வர் எழுதிய ஆசிரியர் களுக்கான புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வியாழனன்று (செப். 5) நடைபெற்றது.  “The Heart and Art of Teaching” என்ற இந்த நூலை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை க்கழகப் பதிப்பகம் அச்சிட்டுள்ளது. இந்நூலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வெளியிட இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக்கொண்டார். அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், மாற்றத்தை ஏற்படுத்து வது கல்வி ஒன்றுதான். மனதின் அச்சம், மனதின் கனவு பற்றியும் இந்த  நூலில் புத்தக ஆசிரியர் நிறைய குறிப் பி்டுகிறார். ஆசிரியர்களும், மாணவர் களும் இணைந்து பங்காற்றினால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நமது மாநில பாடத்திட்டம் குறித்து சிலர் விமர்ச னம் செய்கின்றனர். அரசுப் பள்ளி களில் உள்ள பாடத்திட்டத்தில் படித்த வர்கள் அதன் மூலம் பயன் பெற்று உயர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் கூறும் கருத்துதான் எங்களுக்கு முக்கி யம் என்றார்.  நூலாசிரியர் எம்.புருஷோத்தமன் பேசுகையில், தன்னுடைய 36 ஆண்டு கால ஆசிரியர் அனுபவத்தின் அடிப் படையில் இந்த புத்தகத்தை எழுதி யுள்ளதாக தெரிவித்தார். எல்லாத் துறைகளைப் போலவே ஆசிரியர் துறையும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லா ஆசிரியர் களிடத்திலும் திறமையும், புத்திசாலித் தனமும், பொறுப்பும், அர்ப்பணிப்பும், தியாக மனப்பான்மையும் உருவாக இந்நூல் பெரிய அளவில் உதவும் என்று  கூறினார்.  விழாவில் எவர்வின் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் 7 முதல்வர்களுக்கு நல்லாசிரியர் விருது களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகு வாக கவர்ந்தன. விழாவை உஜேஷா மற்றும் கிரிஸ் ஓவன் பள்ளி மாண வர்கள் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி யில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தின் இந்தியத் தலைவர் சுமந்தா தாத்தா ,  எவர்வின் பள்ளியின் சிஇஓ மகேஸ்வரி, இயக்குநர் முரளி  கிருஷ்ணா, அறக்கட்டளை உறுப்பினர் வித்யா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.