tamilnadu

img

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கு மறுவாழ்வுத் திட்டங்கள்: தொல். திருமாவளவன்

சென்னை,ஜூன் 12- குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்கத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன் வலியு றுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாளில் (ஜூன் 12) விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.  குழந்தைத் தொழிலாளர் களுக்கு எதிரான பிரச்சாரம் (சிஏசிஎல்) என்ற அமைப்பு கடந்த  2022-ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது கோவிட்-19 பெருந்தொற்றுக் கால த்தில் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 180 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

இது மிகுந்த அதிர்ச் சியளிப்பதா கவுள்ளது. வேளாண்மை, செங்கல் சூளை கள், கட்டுமானம், வீட்டுவேலை, தொழிற்சாலைகள், மீன்பிடித்தல், கைத்தறித் தொழில் போன்ற துறை களில் குழந்தைத் தொழிலாளர்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், அந்த அறிக்கை யில் தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகளும் முன்வைக்கப் பட்டுள்ளன. “மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விரிவான கணக்கெடுப்பு நடத்துதல்; குழந்தைத் தொழி லாளர்களைப் பயன்படுத்தும் முத லாளிகளைத் தண்டிக்கக் கடுமை யான சட்டங்களை இயற்றுதல்; குழந்தைத் தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி செய்தல் போன்றவை குறிப்பிடத் தக்க வையாகும்”. குழந்தைத் தொழிலாளர் களிடம் வேலை வாங்குவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. எனினும், மறுவாழ்வுக் கான திட்டங்கள் இன்னும் கூடு தலாக செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் மாநிலத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதற்கும், அவர்க ளுக்குரிய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஏற் படுத்தவும் அரசு உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.