tamilnadu

மனைகள் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்க!

சென்னை, மார்ச் 26 - மனை வணிக (ரியல் எஸ்டேட்) சட்டப்படி புரமோட்டர்ஸ் அல்லாத மனைகளை பதிவு செய்வதில்  குளறுபடிகள் உள்ளன. அவற்றை அரசு சரி செய்ய  வலியுறுத்தி ஞாயிறன்று (மார்ச் 26) சென்னையில் பதிவுத்துறை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். மக்கள் தொகைக்கேற்ப புதிய பணி யிடங்களை உருவாக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  தனியார் மூலம் செயல் படுத்தப்படும் ஒப்பந்தம் மற்றும் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) பணி களை ரத்து செய்ய வேண்டும், 100 சார்பதிவாளர் அலுவல கங்களில் செயல்படுத்தப்படும் சனிக் கிழமை வேலை நாளை ரத்து செய்ய வேண்டும்,  பதிவு பணிகளை  மேற்கொள்ளும்  உதவியாளர்களுக்கு சார்பதிவாளர் ஊதியத்தை வழங்க வேண்டும்,  அரசின் இருமொழி கொள்கைக்கு எதிராக மூன்றாவது மொழித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பதிவுத்துறை பணி யாளர் சங்கங்களின் கூட்டு நடவடி க்கைக்குழு இந்த போராட்டத்தை நடத்தியது. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்க தலைவர் மு.மகேஷ், தமிழ்நாடு  பதிவுத்துறை அமைச்சுப் பணியாள ர்கள் சங்க தலைவர் மு.வீரகுமார், பதிவுத்துறை அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கி னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க  துணைத்தலைவர் சா.டேனியல் ஜெயசிங், சார்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் தா.மணிராஜ், அமைச்சுப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.