சமையல் உப்பு மற்றும் சர்க்கரையில் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்படம் குறித்து ஒன்றிய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதா னந்தம் விமர்சித்துள்ளார். சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான Toxics Link (டாக்சிக்ஸ் லிங்க்) வெளியிட்ட ஆய் வறிக்கையின்படி, ஒரு கிலோ உப்பில் 6.71 முதல் 89.15 வரையிலான பிளாஸ்டிக் துகள்க ளும், ஒரு கிலோ சர்க்கரையில் 11.85 முதல் 68.25 வரையிலான துகள்களும் கலந்தி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவ காரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி. சச்சிதானந்தம், ஒரு நபர் தினமும் சராசரியாக 5 கிராம் உப்பும், 30 கிராம் சர்க்கரையும் உட்கொள்வதால், ஆண்டுக்கு 3 கிலோ உப்பும், 11 கிலோ சர்க்கரையும் நுகர்கி றார்; அத்துடன் பிளாஸ்டிக்கும் அவரது உடலுக் குள் செல்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த மத்திய மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம், FSSAI, CSIR-IITR லக்னோ, ICAR-CIFT கொச்சி மற்றும் பிட்ஸ் பிலானி ஆகிய மூன்று நிறுவ னங்களில் மட்டுமே ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தது. மேலும், இந்த ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடு, தற்போதைய நிலை உள்ளிட்ட எந்த விவரங்களையும் அமைச்சகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “மக்களின் உடல்நலத்தை நேரடியாக பாதிக்கும் இவ்வளவு முக்கியமான பிரச்ச னைக்கு வெறும் மூன்று நிறுவனங்களில் மட்டுமே ஆய்வு நடத்துவது சமுத்திரத்தில் பெருங்காயம் கரைப்பது போன்றது. பல்வேறு ஆய்வுக்குழுக்கள் ஈடுபட்டால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். மத்திய அரசு தனது அலட்சிய போக்கை மாற்றிக் கொண்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரி வான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.