tamilnadu

img

செங்கொடி இயக்க தலைவர் தோழர் என்.ஆர்.இராமசாமி - கோ.மாதவன்

செங்கொடி இயக்க தலைவர் தோழர் என்.ஆர்.இராமசாமி - கோ.மாதவன்

இந்தியா விடுதலை பெறுவ தற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் ரெட்டியூ ரில் சிறு விவசாயியான ரங்கப்பன் - துரையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1929 ஆம் ஆண்டு தோழர் என்.ஆர்.இராமசாமி பிறந்தார். தன்னுடைய 20 ஆவது வயதில், 1949 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டபோது வலது திருத்தல் வாதத்திற்கு எதிராக போராடி மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கடலூர் மாவட்ட ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவர். அன்று முதல் தனது இறுதி மூச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். 81 ஆவது வயதில் அவர் மறைந்தார். வள்ளலாரின் வழியில் மார்க்சியத்தை நோக்கி மேலாடை இல்லாமல் வேட்டி துண்டு மட்டுமே அணிந்த எஸ்.நட ராஜன் என்ற வள்ளலார் பெரும் பக்தர் இவருக்கு முன் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். வள்ளலா ரை நேசிப்பவர்கள் கம்யூனிஸ்டுகளா கத் தான் மாறுவார்கள். ஏனெனில் வள்ளலார் மானுட நேசன். அந்த எஸ்.என் தான் என்.ஆர்.ஆர் அவர்க ளை கட்சியின்பால் ஈர்த்தார். விவசாயிகளின் குரலாக, உழைப்பாளிகளின் நம்பிக்கையாக கடலூர் மாவட்ட காவிரிப் படுகை யான சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வட்டங்கள் முழுக்க முழுக்க தஞ்சை யைப்போல விவசாயத்தை சார்ந்த  பகுதியாகும். கூலிப் போராட்டமும், குத்தகை விவசாயிகள் பிரச்சனை யும் தொடர்ந்து வெடித்து நிற்கும் பகுதி களாகும். குத்தகை விவசாயிகள் கடுமையாகச் சுரண்டப்பட்ட சூழலில், 1953 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் கலந்து கொண்ட குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை குமராட்சியில் நடத்துவதில் என்.ஆர்.ஆர் முன்நின்றார். பல கிரா மங்களுக்குச் சென்று குத்தகை விவ சாயிகளை திரட்டினார். வாகன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் அவரைப் போன்ற தோழர்கள் கிரா மங்கள் தோறும் பயணித்தது ஆச்சரி யங்கள் நிறைந்த சாகசப் பயணமாகும்.

செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டத்தால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பெறப்பட்ட உரி மையான பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை, சிதம்பரம், காட்டுமன்னார் குடியில் உள்ள விவசாய கூலித் தொழி லாளர்களுக்கு அமலாக்க வேண்டும் என்றும், குத்தகை மற்றும் வார சாகுபடி தாரர் பாதுகாப்புச் சட்ட அமலாக்கம், கூலி உயர்வு போன்ற கோரிக்கைக ளுக்காக தென்னார்க்காடு மாவட் டத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். விவசாயிகளின் தளபதி 12 ஆண்டு காலம் தென்னார்க் காடு மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவராக பணியாற்றியவர் தோழர் என்.ஆர்.ஆர். விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், துணைத் தலைவர் என பத்தாண்டுகள் விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல்லாண்டுகள் பணி யாற்றியவர். 1976 முதல் 1988 வரை 13 ஆண்டுகள் விழுப்புரம், கள்ளக் குறிச்சி, புதுச்சேரி, கடலூர் மாவட் டத்தை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்ட கட்சியின் செயலாளராக பணியாற்றினார். இன்று புதுச்சேரி மாநிலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள். இத்தனை பெரிய நிலப்பரப்பில் வாகன வசதியற்ற காலத்தில் அவர் பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு கால்நடையாகச் சென்றார். இரவு நேரங்களில் பெரும் பகுதி லாரியில் தான் விருத்தாசலம் செல்வார். கட்சியை  கட்டியெழுப்பிய சிற்பி செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டி வனம், உளுந்தூர்பேட்டை, காட்டு மன்னார்குடி, சிதம்பரம், விருத்தாச லம் பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதிலும் பெரும் பங்காற்றினார். கட்சியை கட்டுவதற்காக விருதாசலம் சென்றவர் அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார். பல நெருக்கடியான கால கட்டத்தில் கட்சியை திறம்பட வழி நடத்தி யவர். இன்று சிதம்பரம் நகரத்தில் கட்சி அலுவலகம் கம்பீரமாக நின்றிட முக்கிய காரண கர்த்தாக்களில் அவரும் ஒருவர். நெருக்கடி காலத்தின் நெஞ்சுரம் மிக்க தலைவர் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கம் காத்தவர். இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார். நெருக்கடி நிலை காலத்தில் இவர்தான் கட்சியின் மாவட்டச் செயலாளர். தோழர் என்.ஆர். ஆர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த வர் இல்லை, எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை தனது துயராக நினைத்து தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் முன்நின்றவர். ஏனெனில் அவர் ஒரு மார்க்சிஸ்ட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11ஆவது மாநில மாநாட்டை 1981-82 இலும், 15ஆவது மாநில மாநாட்டை 1995இலும் கடலூரில் முன்நின்று நடத்தினார்.

புரட்சிக்காரரின்  புரட்சிகரக் குடும்பம் அவரது மூத்த மகன் ஜீவானந்தம் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னத்தின் மாநில பொதுச் செயலாள ராக பணியாற்றுகிறார். அவரது இரண்டாவது மகன் சங்கரையா மார்க்சிஸ்ட் கட்சியின் விருதாசலம் நகரச் செயலாளராகவும் மாவட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்ட வர். வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர். இளைய மகன் ரவி ராஜ் வடலூரில் உள்ள என்.சி.ஆர்.எல் தொழிற்சாலையில் சிஐடியு சங் கத்தின் முக்கிய ஊழியராக பணி யாற்றினார். தோழர்களை நேசித்த நண்பர் எடுக்கும் காரியத்தில் விடாப்பிடித் தன்மையுடன் செயல்படுபவர். நகைச்சுவை உணர்வுடன் அணுகும் பாங்கும், இளம் தோழர்களிடம் அன் பாகப் பழகும் தன்மையும், இளைஞர்க ளையும் பெண்களையும் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வரும் ஆர்வ மும் மிக்கவர். தோழர் என்.ஆர்.ஆர் போன்ற மகத்தான தலைவர்களின் வாழ்க்கையை இளைய தலைமுறை க்கு சொல்லிக்கொண்டே இருப்பது அவசியத் தேவை.