சென்னை,பிப்.21- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலளிக்கையில், “தமிழ் நாட்டில் இதுவரைக்கும் ரூ.5780 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுமைக்கும் கடந்த 33 மாதங்களில் 1028 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் (பிப்.21) ஒரே நாளில் மட்டும் 32 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. அறுபடை வீடுகள் திருச்செந்தூரில் ரூ.300 கோடியில், பழனியில் ரூ.50 கோடியில், சுவாமிமலையில் ரூ.1 கோடியே 58 லட்சத்திலும், திருப்பரங் குன்றத்தில் ரூ.27 கோடியில் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக் கும் 35 கோவில்களுக்கு ராஜகோ புரம் அமைத்துள்ளோம். சாமி மலைக்கு மின் தூக்கி அமைத்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.