பெங்களூரு அணியின் அதிரடி முடிவுக்கு குவியும் பாராட்டு
கிரிக்கெட் உலகின் முதன்மை யான உள்ளூர் டி-20 தொட ரான ஐபிஎல் தொடரில் இது வரை 17 சீசன் நிறைவு பெற்றுள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அனைத்து சீசனிலும், முக்கிய நட்சத்திர அணியாக பங்கேற்றுள்ளது. 8 கேப்டன்கள், 7 தலைமைப் பயிற்சியா ளர்கள், 5 முறை லோகோ மாற்றம், 2 முறை பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு மேற்கொண்டும் இன்னும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிய வில்லை. இது பெங்களூரு ரசிகர்களு க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக் கெட் உலகிற்கும் சோகமான விஷயம் தான். காரணம் ஒருமுறையாவது கோலியை ஐபிஎல் கோப்பையோடு பார்க்க வேண்டும் என்பது தான். இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் நடைபெறும் 18ஆவது சீசனில் கோப் பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக் கையில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதாருடன் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களூரு அணி.
2025 ஐபிஎல் சீச னில் பெங்களூரு அணியை வழிநடத்த ரஜாத் பட்டிதாரை கேப்டனாக நியமித் துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கடந்த 2 சீசன்களிலும் தென் ஆப்பி ரிக்க அணியை சேர்ந்த டு பிளசிஸ் கேப்டனாக பெங்களூரு அணியை வழி நடத்திய நிலையில், இந்த சீசனுக்கு விராட் கோலி கேப்டனாக மீண்டும் வருவார் என செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இளம் வீரர் ரஜாத் பட்டிதாரை தலை மையில் பெங்களூரு அணி களமிறங்கு கிறது. ரஜாத் பட்டிதாருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுப வம் பெரிதாக இல்லை. அதே போல 100 உள்நாட்டு போட்டிகளில் கூட அவர் விளையாடியதில்லை. எனினும் ரஜாத் பட்டிதாரை கேப்டனாக நிய மித்துள்ள பெங்களூரு அணியின் முடிவு தைரியமானது என சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.