tamilnadu

img

மழையால் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்

சென்னை, நவ.12- தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில்  மூழ்கியுள்ளது என்று அரசு தெரிவித் துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக  பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் 37 மாவட்டங்களில் சராசரியாக 47.03 மி.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 மி.மீ. சராசரி மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 436 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 317 மி.மீ., செம்பனார் கோயிலில் 242 மி.மீ. அதி கனமழையும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரியில் 206 மி.மீ., சிதம்பரம் பகுதியில் 308 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது. கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலை யங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலை யங்களில் கனமழையும் பதிவாகி யுள்ளது. கனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரண மையங்கள் அமைப் பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமையன்று (நவ.12) தலை மைச் செயலகத்தில் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத் தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த 2729 குடும்பங்களைச் சார்ந்த 4452 நபர்கள் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த 68 நபர்கள் 1 நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 4,520 நபர்கள் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடு  துறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங் களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற் பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். முன்னதாக, நீலகிரி, ராணிப் பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு  வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்கள் அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள்  நிலைநிறுத்திடவும் முதல்வர் உத்தர விட்டார். மேலும், சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதி களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.