tamilnadu

img

தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை, அக். 18 - ஒன்றிய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அக்டோபர் 18 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி மற்றும் ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்றும் ஆங்கில வழிக் கல்வி கூடாது என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளது.  இந்தியை திணிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரி வித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த இந்திய மாண வர் சங்கம் அறைகூவல் விடுத்துள் ளது.  இதன்படி அக்டோபர் 18 தமிழகம் முழுவதும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டத்தை நடத்துவோம்

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிரு பன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து அலுவலர் சார்ந்த நட வடிக்கைகளிலும் இந்தியை அடிப் படையாக்க பரிந்துரை செய்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. இந்தி திணி ப்புக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தி திணிப்புக் கொள்கைக்கு எதிராக அனை த்து மாநில அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும். மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ‘நீட்’ தேர்வு திணிப்பால் தமிழகத்தில் 35 மாணவர்களின் உயிரை ஒன்றிய அரசு காவு வாங்கி உள்ளது. இந்நிலையில் இந்தி திணிப்பின் வாயிலாக, மாநில அரசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள குறைந்த பட்ச உரிமைகளையும் பறிக்க முயற்சிக்கின்றனர். இதற்கெதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்து வோம் என்று தெரிவித்தார்.  இந்தப்போராட்டத்திற்கு சங்கத் தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மிருதுளா தலைமை தாங்கி னார்.  மாவட்ட நிர்வாகிகள் காவியா, குணா (வடசென்னை), அருண்குமார், தமிழ் (மத்தியசென்னை), ஆனந்த், பாரதி (தென்சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் 

கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு இந்திய மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கயல்விழி தலைமை வகித்தார். மாநிலத் தலை வர் அரவிந்த்சாமி உரையாற்றினார்.  இதில், மாவட்ட செயலாளர் அசாரு தீன், மாவட்டக்குழு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செய லாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.