திண்டுக்கல், செப்.2 - அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வெற்றி விழா மாநாடு, திண்டுக்கல்லில் ஆக.29 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த சிறப்பு மாநாட்டில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அருந்த தியர் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று வெற்றி விழா உரையாற்றி னர். அதில், சிபிஎம் திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் சுரா.தங்கபாண்டியன், சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் ஆகியோர் ஆற்றிய உரை களின் சாராம்சம் வருமாறு:
அரசியல் கோரிக்கையாக்கியது சிபிஎம்
ஆர்.சச்சி தானந்தம் எம்.பி., பேசுகையில், “விஞ்ஞானப்பூர்வ மாக ஆய்வு செய்யாமல் சிபிஎம் எந்த கோரிக் கையையும் முன் வைத்து போராடியது இல்லை. அந்த அடிப்படையில்தான் அருந்ததிய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது ஒரு அரசியல் கோரிக்கையாக மாறிய தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதை இம்மக்களும் நினைவில் கொண்டுள்ளார்கள்; அதில் எந்த சந்தே கமும் இல்லை. நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலிலே இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ள அருந்ததிய மக்கள் எந்தப் பக்கமும் சாராமல் இந்தியா கூட்டணி பக்கம் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், இதுதான் இந்தியாவிற்கான ஒரு சரியான மாற்று என்பதை உணர்ந் திருந்த மக்களாக, அரசியல் உணர்வுமிக்க மக்களாக இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்ல இன்னும் வலுவான ஒற்றுமை தேவைப்படுகிறது. பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும், இந்த அமைப்புகள் எல்லாம் ஒரே மேடை யிலே அவர்களை ஒருங்கிணைத்திருக் கிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும்தான் செய்து கொண்டிருக்கிறது. இந்த உள் இடஒதுக்கீடு நாம் போராடி பெற்ற உரிமை. இந்த உரிமையை எப்பாடு பட்டாகிலும் பாதுகாக்க வேண்டி யது அவசியம்.
இந்தியாவிற்கு வழிகாட்டும் உள்இடஒதுக்கீடு தீர்ப்பு
திராவிடத் தமி ழர் கட்சித் தலை வர் வெண்மணி பேசுகையில், “தமிழ்நாட்டில் 65 லட்சம் பேர் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி இல்லை. மாவட்ட நீதிபதி யாக இல்லை. போக்குவரத்துத் துறை அதிகாரிகளாக இல்லை. இந்நிலையில் இந்த ஒதுக்கீட்டை எதிர்ப்பதை ஏற்க முடியாது. இந்த ஒதுக்கீடு அருந்ததியராக இருந்தால் மட்டுமல்ல; விளிம்பு நிலை யில் யார் இருந்தாலும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதற்காக நாம் ஓரணி யில் நிற்பது சரியாக இருக்கும். பெற்ற இந்த இடஒதுக்கீடை பாதுகாப்போம். யார் தடுத்தாலும் எதிர்ப்போம். 1947-க்கு முன்பு இங்கே இடஒதுக்கீடு இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மறுக்கப் பட்டது. பிராமணர்கள் திட்டமிட்டு இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார்கள். அரசியல் சாசனப்படி அனைவரும் ஒன்று தான். இடஒதுக்கீடு தேவையில்லை என்றார்கள். 1951இல் தந்தை பெரியார் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை முன்னெ டுத்தார். சமூக நீதி இயக்கங்கள் பின்னால் இருந்தன; பேரறிஞர் அண்ணா இருந்தார்; காமராசர் இருந்தார்; இடது சாரி இயக்கங்கள் இருந்தன. தமிழ்நாட் டில் நடந்த போராட்டத்தால், முதல் சட்டம் உருவானது. அதை கொண்டு வந்தவர் நேரு; அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தவர் அம்பேத்கர். 1951 எப்படி இந்தியாவிற்கு வழிகாட்டி யதோ, அதைப் போலவே இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற உள் இடஒதுக்கீடு இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது” என்றார்.
தலித் மக்களிடையே ஒடுக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள்
ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் சுரா.தங்க பாண்டியன் பேசு கையில், “இந்த அருந்ததியர் மக்கள் 3 விழுக் காடு உள்ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் கள் என்றால் அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமா என்றால் போதாது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தலித் மக்களில் தலித்துக்களாக, ஒடுக்கப் பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக செத்த மாட்டைத் தூக்குவது, தண்டோரா போடுவது, எழவு சொல்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதை மாற்றி அமைக்க இந்த இட ஒதுக்கீடுதான் ஆயுதம்” என்றார்.
தலித்துகளின் விடியல் போராட்டம்
சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் பேசுகையில், “தஞ்சையில் வாழ்ந்த மக்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பாக விவசாய வேலைக்கு வந்துவிட வேண்டும். சூரியன் மறைந்த பின்னால்தான் வேலை யிடத்தில் இருந்து வெளியேற வேண்டும். இப்படிப்பட்ட அடிமைத்தனம் நீடித்த நிலையில், காலதாமதமாக வேலைக்குச் சென்றால், ஏன் என்று கேள்வி கேட்டால் சாணிப்பால், சவுக்கடி கொடுக்கப்பட்டது. இதுதான் கீழத் தஞ்சையின் வரலாறு என்பது இன்றைக்கு இருக்கும் தலை முறைக்கு தெரியாது. அந்த மக்களின் விடுதலைக்காக போராடியவர் சீனிவாச ராவ். சாணிப்பாலும், சவுக்கடியும் கொடுத்தால் திருப்பி அடிப்போம் என்றார். அன்றைக்கு பிறந்தது தலித் மக்க ளின் விடியல். ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர் சீனிவாசராவ். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தோடு பொருளாதாரத்திற்கான போராட்டத்தை யும் இணைத்து நடத்த வேண்டியுள்ளது. ஒரு சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கு பாடுபட வேண்டும்” என்றார்.