சென்னை, ஆக. 11 – தனியார் வங்கிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) பொதுச் செயலாளர் தேபாசிஷ் பாசு சவுத்திரி வலியுறுத்தி உள்ளார். பெபி-யின் 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆக. 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி வெள்ளி யன்று (ஆக.11) சென்னையில் செய்தியாளர்களிடம் தேபாசிஷ்பாசு கூறியதாவது: ஒன்றிய அரசின் நவதாராள மயக் கொள்கை மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களுக்கு உதவி செய்வதாகவே உள்ளது. நாட்டின் பொதுத் துறைகளை அம்பானிக்கும், அதானிக்கும், டாடாவிற்கும் விற்று வருகிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பின் வாயிலாக மக்கள் மீது கடுமை யான தாக்குலை தொடுத் துள்ளது. இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற உள் ளோம். இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் அறிவித் துள்ளார். எஸ் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகளில் ஊழல் மலிந்துள்ளது. இந்த தனியார் வங்கிகளைத்தான் அரசு ஊக்குவிக்கிறது. வங்கி கள் பொதுத்துறையில் இருந்த தால்தான், 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. அமெரிக் காவில் தனியாரிடம் உள்ள வங்கிகள் உள்ளன. சிலிக்கான் வங்கி, பர்ஸ்ட் ரிப்பப்ளிக் வங்கி ஆகியவற்றின் சொத்து மதிப்பு 35 லட்சம் கோடி. இந்த இரு தனியார் வங்கிகளும் திவாலாகி விட்டன. இதன் பிறகும், ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க துடிக்கி றது.
கூட்டுறவு வங்கிகளை விழுங்க துடிப்பதா
மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட கூட்டுறவு வங்கி களை ஒன்றிய அரசு எடுத்து, வணிகமயமாக்க முயற்சிக்கி றது. இது ஆபத்தான விளைவை உருவாக்கும். கிராமப்புற வங்கிகள்தான், கிராமப்புற மக்களுக்கு 90 விழுக்காடு கடனை வழங்கு கின்றன. அந்த கிராம வங்கி களின் 49 விழுக்காடு பங்கு களை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதையும். ரிசர்வ் வங்கியின் தனித்தன்மையை ஒன்றிய அரசு அழிக்கிறது.
5லட்சம் காலிப்பணியிடங்கள்
ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்புத்தொகை ஒன்றிய அரசு பறித்துள்ளது. நபார்ட் போன்ற வங்கிகளை பல வீனப்படுத்துகிறது. வேலை யில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், வங்கித்துறையில் 5 லட்சத் திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களை நிரப்ப மறுக்கின்ற னர். பிஎஸ்என்எல், ஏர் இந்தியா நிறுவனங்களை பலவீனப் படுத்தியது போன்று, பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிய அரசு பலவீனப்படுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்களிடம் கொள்ளை
ஏடிஎம் கட்டணம், குறைந் தபட்ச இருப்புத்தொகை இல்லாததற்கு அபராதம் என வாடிக்கையாளர்களிடம் கொள்ளைடிக்கின்றனர். இதனை தடுக்கவும், வாடிக் கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டும். வங்கிப்பணிகள் அனைத்தை யும் வெளியாட்கள் மூலம் செய் கின்றனர். வங்கி ஊழியர்கள் போன்று அனைத்து வேலை களையும் செய்யும் சுமார் 6 லட்சம் வணிக முகவர்க ளுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அத்துக்கூலி போல் கொடுக்கின்றனர் . நவதாராளமயக் கொள்கை, ஒன்றிய அரசின் பிளவுபடுத்தும் கொள்கை, வங்கிகளையும், ஊழியர் களையும் பாதுகாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும், தனியார் வங்கிகளை அரசுடமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை விவாதித்து, தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். இந்த மாநாட்டில் 23 மாநிலங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட பிரதிநிதி கள், பார்வையாளர்கள் பங் கேற்கின்றனர்.
சிஐடியு தலைவர் தபன்சென் பங்கேற்பு
பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, கிராம வங்கி, கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கிகளிலிருந்தும், அயல்பணி செய்யும் தொழி லாளர்கள் சார்பான பிரதிநிதி களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை ஆக.12ந் தேதி சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் தொடங்கி வைக் கிறார். ஆக.13ந் தேதி நடை பெறும் மகளிர் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பி.கே.ஸ்ரீமதியும், ஆக.14ந் தேதி சிஐடியு அகில இந்திய செய லாளர் ஆர்.கருமலையானும் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது பெபி தலைவர் சி.ஜெ.நந்தகுமார், பொருளாளர் அனி மேஷ் சூர், செயலாளர்கள் விஜய் அரோஸ்கர், இணைச் செயலாளர்கள் சி.பி.கிருஷ்ணன், சிரஞ்சித்கோஷ், மாநிலத் தலைவர் சுனில்குமார், பொதுச்செயலாளர் ரவிக் குமார் ஆகியோர் உடனிருந்த னர்.