பட்டுக்கோட்டை, ஏப்.4 - தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயி கள் பயன்பெற ஏதுவாக, ஒன்றிய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் பட்டுக் கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நாஃபெட் மூலம் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்வில், தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு, பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மேற் பார்வையாளர் மா.மார்ட்டின் எட்வர்டு ஆகியோர் கலந்து கொண்டனர். திங்களன்று 15 தென்னை விவசாயி கள் ஐந்து டன் அளவுக்கு தேங்காய் கொப்பரையை கொண்டு வந்து விற்பனை செய்தனர். தனியார் வியாபாரிகள் அரவை கொப்பரை கிலோ ரூ.80 வரை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் நாஃபெட் மூலம் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60 என அரசால் விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளபடி கொள்முதல் செய்யப்பட்டு நாஃபெட் நிறுவனத்தால் பணம் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும். தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தேங்காய் கொப்பரை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் ஆறு சதவீதத்துக்குட்பட்ட ஈரப்பதத்துடன் சில்லுகள், சுருக்கம் கொண்ட கொப்பரை, பூஞ்சாணம் கொப்பரை இல்லாமலும், கருமை நிறம் கொண்ட கொப்பரை பத்து சதவீத்துக்கு மிகாமலும் தரத்துடன் உள்ள கொப்பரையுடன், சிட்டா, அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றார்.