ஞானசேகரனுக்கு தண்டனை சமூக விரோதிகளுக்கு பாடம் தலைவர்கள் கருத்து
விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது:
கீதா ஜீவன் “ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். தமிழக அரசின் துரித நடவடிக்கை யால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது” என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக் கிறார்.
அரசியல் தலையீடு இல்லை:
டிஜிபி பேட்டி “அண்ணா பல்கலைக் கழக வழக்கில், 5 மாதங் களில் தீர்ப்பு கிடைத்தது என்பது காவல்துறையினர் விசாரணை மற்றும் வழக் கறிஞர் நடவடிக்கை களுக்கு சான்றாகும். அரக் கோணம் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளிலும், பிற வழக்குகளிலும் அரசியல் தலையீடு என்பது முற்றி லும் இல்லை” என்று தமிழ் நாடு காவல்துறை தலை வர் தெரிவித்துள்ளார்.
ஞானசேகரனுக்கு தண்டனை: எடப்பாடி பழனிசாமி கருத்து
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளி யிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகர னுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளி களில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தி உள்ளது. அதனால் தான் #யார் அந்த சார் என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். மேலும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அந்த சார் யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டார்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்ற வாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது ஏன்?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் அந்த சார்?: அரசு வழக்கறிஞர் விளக்கம்
நீதிமன்ற வளாகத்தில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தி பேசுகையில், “ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது, அவரது செல்போன் ஃபிளைட் மோடில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, தானும் அண்ணா பல்கலைக் கழக ஊழியர்தான் என ஏமாற்றும் வகையில், ஃபிளைட் மோடில் இருந்த செல்போனில், பேசுவது போல ஞானசேகரன் ஏமாற்றி யிருக்கிறார். இதை தொலைதொடர்பு சேவை நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். எனவே, இதற்கு மேல் தீர்ப்பை விமர்சித்தால் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்”என்றார்.
“இழிவான அரசியல்” - அமைச்சர் ரகுபதி சாடல்
“ஐந்தே மாதங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழக முதலமைச்சர். அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பழனிசாமி. ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்று தருவதை விட, இந்நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், மீண்டும் அதே பொய்யை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் பழனிசாமி. இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழு நேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி, இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.