23-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டப் பிரதிநிதி ஒருவர் பொது மாநாட்டிற்கு தனது மகளையும் அழைத்து வந்திருந்தார். அவர் எம்.டெக் மாணவி ஓவியா (22). மாநில மாநாட்டை முதன் முறையாக பார்க்க வந்திருந்தார். அவரிடம் பேசியபோது, அகில இந்திய பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு, நீட் இரண்டுமே தேவையில்லை. கிராமப்புற மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளாலும் கல்லூரிகளுக்குச் செல்ல முடியாது என்றார். பாஜக மதவாத, சாதியவாதத்தை தூண்டி வருகிறது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்து வருகிறது. தொலைக்காட்சி பார்ப்பது அரிதான விஷயம் என்று கூறிய ஓவியா, தீக்கதிர் பத்திரிகை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். எனக்குப் பிடித்த கட்டுரைகளாக இருந்தால் வாசிப்பேன் என்றார்.