tamilnadu

img

மருத்துவப் பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டை மாணவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை, ஜன.1- மருத்துவப் பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உடல்நலக்குறைவால் உயிரி ழந்த சம்பவம் பெரும் சோக த்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த சையது அபுல்ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர், சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் ஆன்-லைன் மூலம் கல்வியை கற்று முடித்த ஷேக் அப்துல்லா, மருத்துவ பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி சீனா சென்றுள்ளார்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஷேக் அப்துல்லாவிற்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, ஏழ்மை நிலையிலும் அவரது தந்தை மருத்துவச் செலவுக்காக உறவினர்களிடம் கடன் வாங்கி ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்தை  அனுப்பி வைத்துள்ளார். மகனை உயிருடன் ஊருக்கு அழைத்து வர உதவு மாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலை யில், ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து விட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய-மாநில அரசுகள் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய முறைப்படி அங்கேயே அடக்கம் செய்ய வழிவகை செய்யவேண் டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.