tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, ஏப்.7- நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகள் தனித்தனி சட்டங்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருவதால் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது.  பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு,” 21 மாநகராட்சிகள், 138  நகராட்சிகள், 490 பேரூராட்சி கள் என்று பரவலான நகரமய மாக்கலின் வடிவத்துடன் நாட்டிலேயே அதிக எண்ணிக் கையிலான சட்டபூர்வ நகரங் களை தமிழ்நாடு கொண்டுள்ளது” என்றார். கடந்த 10 மாத காலத்தில் துறை  சார்பில் நடைபெற்ற பணிகளை யும் அதன் அனுபவங்களையும் அமைச்சர் நேரு பட்டியலிட்டார். நகரங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்குவது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கடமை என்றும் இந்த பணி மற்றும்  சேவைகளை நிகர் நிலையில் கண்காணிக்கவும் பணிகள் குறித்த விபரங்களை மக்கள் தெரிந்து கொள்ளவும் சீர்மிகு ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும்  

என்று புதிய அறிவிப்பை வெளி யிட்டார். நகரம் தூய்மையாக இருப்பதற்கு நாள்தோறும் அயராது உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது  அரசு மிகுந்த அக்கறை கொண் டுள்ளது. அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தூய்மைப் பணியாளர்க ளின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவது உறுதி செய்யவும் இயந்திர மயமாக்கப்படும் இப்பணிகளில் தேவையான திறன் பயிற்சிகளை வழங்கி அந்த பணியில் ஈடுபடுத்தவும் விருப்பத்தின் அடிப்படையில் மாற்றுத் தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் சிறு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தகுதியான சாலையோர வியாபாரிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி  செய்ய நடப்பாண்டில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப் பட்டு அவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வியாபாரம் செய்ய ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், குத்தாலம், மயிலாடுதுறை பகுதி மக்களுக்கு கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் மேம்பாட்டு திட்டம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கடம்பத்தூர், வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்கு நேமம் ஏரிக்கரையை புனரமைத்து அதனை நீராதாரமாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம், திரு நெல்வேலி மாவட்டம் ராதாபுரம்  மற்றும் வள்ளியூர் ஒன்றியங்க ளுக்கு தாமிரபரணி ஆற்று நீர்  ஆதாரமாக கொண்டு கூட்டு  குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஆய் வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார். 3 மாநகராட்சி மற்றும் 22 நகராட்சிகளில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் 62 கோடி அமைக்கப்படும். கோவை, ஓசூர்,  மதுரை, கடலூர், கரூர் ஆகிய  மாநகராட்சிகளிலும் விருதாச்ச லம், ராணிப்பேட்டை, சிவகங்கை,  திருவண்ணாமலை, சோளிங்கர், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ள ப்பட்டி, புகலூர் உள்ளிட்ட 25 நகராட்சிகளில் 53 சந்தைகள் ரூ. 250 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்படும் எனவும் கூறினார்.