tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா நினைவாக வெள்ள நிவாரணம் வழங்கல்

சென்னை மற்றும் கோயம்புத்தூர் நண்பர்கள் குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தோழர் சங்கரய்யா நினைவாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது  தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு  விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாநில செயலாளருமான தோழர் சங்கரய்யா நினைவாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் நண்பர்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 450 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் காசி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,  தோழர் சங்கரய்யா உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சென்னையில் இருந்து  தோழர் சங்கரய்யா மகன் நரசிம்மன், ஜான், கோயம்புத்தூரில் இருந்து மலர்வண்ணன், ராமமூர்த்தி, தோழர் சங்கரய்யா பேத்தி கவிதா லட்சுமி, தனபால், பூபதி, பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.