சென்னையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வலியுறுத்தி இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.சித்ரகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காசா, அக். 16 - காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிர மிப்பு போரை நிறுத்த வலியுறுத்தி யும், அப்பாவி பாலஸ்தீனப் பெண்கள், குழந்தைகள் கொலை செய்யப்படுவதை கண்டித்தும் உல கம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்தி வருகின்றனர். அக்டோபர் 7 அன்று காசா மீது வான்வெளி தாக்குதலைத் துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தால் இதுவரை 750-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 2 ஆயிரத்து 670 பாலஸ்தீனர் கள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர்; மேலும், 9 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைத்துள்ள னர்; 5 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீனர் விகிதம் இஸ்ரேலின் ராணுவத்தின் தாக்குதலுக்கு பலியாகி வருகின்ற னர் என காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொன்று குவிக்கப்படும் பெண்கள், குழந்தைகள்
காசாவில் இதுவரை 1,030 குழந்தைகள், இஸ்ரேல் தாக்குத லால் கொல்லப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பாலஸ்தீனக் குழந்தையின் உயிரை இஸ்ரேல் பறித்து வருவதாகவும் ‘டிபென்ஸ் பார் சில்ரென்’ என்ற குடிமைச் சமூக அமைப்பு தெரி வித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்து கள் என எதையும் வழங்காததுடன், நிவாரணப் பொருட்களுடன் வரும் நாடுகளின் குழுவை எல்லையில் தடுத்து நிறுத்துவது, பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் மருத்துவமனை, பள்ளிக்கூடங்களைத் திட்டமிட்டு தாக்கி கொலை செய்வது என இஸ்ரேல் மற்றொரு இனப் படுகொ லையை நடத்தி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி
கடந்த வெள்ளிக்கிழமை முதல் துருக்கி, ஜோர்டான், இராக், லெப னான், சிரியா, எகிப்து உள்ளிட்ட மத்திய கிழக்கு அரபு நாடுகள் மட்டு மல்லாது, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, இத் தாலி உள்ளிட்ட மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆஸ்திரே லியா, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லா ந்து, நெதர்லாந்து, ஐரிஸ், பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், வெனிசுலா, ஜெனிவா, ஸ்பெயின், மொராக்கோ, இந்தோனேசியா, இலங்கை, கனடா, தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர்.
வெள்ளை மாளிகை முன்பும் போராட்டம்
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு அமெரிக்க வாழ் அரபுமக்களும், இன வேறுபாடு களைக் கடந்து பல்வேறு தரப்பு மக்களும் ஒன்றுகூடி, சுதந்திர பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும்; காசாவில் இனப்படு கொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர் னியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் என அமெரிக்கா முழுவதும் மாண வர்கள் மத்தியில் பாலஸ்தீன ஆதரவு முழக்கங்கள் எழுந்து வருகின்றன.
லண்டனில் கம்யூனிஸ்டுகள் பேரணி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாலஸ்தீன ஆதரவு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பல் லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு இஸ்ரே லின் படுகொலைகளை கண்டித்து முழங்கினர். வெள்ளிக்கிழமையன்று தங் களின் வழிபாட்டை முடித்த பிறகு துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இஸ்ரேலின் படுகொலைக ளுக்கு எதிராக அனைவரும் ஒன்று படவேண்டும், அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பி னர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் உள்ள நபிலாஸ் என்ற இடத்தில் பாலஸ்தீன இளை ஞர்கள் தெருக்களில் இறங்கி இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொராக்கோவில் கூடிய பல்லாயிரம் பேர்
மொராக்கோ தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி நகரையே, பாலஸ்தீன ஆதரவு வெள்ளத்தில் மூழ்கடித்தனர். இதேபோல் இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டானில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலைக் கண்டித்து அதன் எல்லைக்குள் செல்ல முயன்றது, அங்கு பெரும் பதற்றத்தை உரு வாக்கியது. ஏமன், இராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடு களிலும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் தங்களின் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ‘பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை ஒட்டு மொத்த அரபு நாடுகளுக்கு மானது’ என தெரிவித்தனர்.
ரோமில் தடைகளை உடைத்துப் பேரணி
ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக ளுக்கு ஆட்சியாளர்கள் கடுமை யான தடைகளை விதித்திருந்த நிலையில் இத்தாலியின் தலைநகர் ரோமில் பிரம்மாண்டமான பாலஸ்தீன கொடிகளுடன் மக்கள் அணிதிரண்டனர். மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் என பல ஐரோப்பிய நாடுகளிலும் அரசின் தடைகளை உடைத்து மக்களின் எழுச்சி பிரம்மாண்ட மாக நடைபெற்றது. பேரணி முடிவில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனர் களின் உரிமையை வழங்க வலி யுறுத்தியும், அமெரிக்க ஆதரவு டன் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு நடவடிக்கைகளை கண் டித்தும் முழக்கங்களை எழுப்பி னர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தோனேசியாவில், ஜாவா தீவு நகரமான சோலோவில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக் கணக்கான மக்கள் அணி வகுப்பில் ஈடுபட்டனர். ‘இஸ்ரேல்தான் பயங்கரவாத நாடு’ ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் உள்ள இஸ்ரேல் தூத ரகம் அருகே கூடிய மக்கள், அப்பாவிகளை கொலை செய்யும் இஸ்ரேல்தான் பயங்கரவாத நாடு எனவும் சுதந்திரமான பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர். வெள்ளிக்கிழமை அன்று வங்க தேச தலைநகர் டாக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தா னிலுள்ள கராச்சியிலும் பல்லாயி ரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி காசா மீதான இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலைகண்டித்தனர். பாலஸ்தீனம் தனியாக இல்லை “நீங்கள் தனியாக நடக்க மாட்டீர்கள்; உங்களோடு நாங்கள் இருக்கிறோம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இலங்கையில் மக்கள் பேரணி நடத்தினர். மேலும் பல்கேரியா, ஏமன், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன், இந்தியாவில் காஷ்மீரி லும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மக்கள் வீதிகளில் இறங்கி தங்களின் ஒருமைப்பாட்டைக் காட்டினர்.