tamilnadu

img

உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பக்கோரி சென்னையில் போராட்டம்

சென்னை, பிப். 24- உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்கு நர் சங்கம் சார்பில் சென்னை யில் உள்ள பள்ளிக்கல்வி (டிபிஐ) வளாகத்தில் வெள் ளியன்று (பிப். 24) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காலியாக உள்ள உடற் கல்வி ஆசிரியர் 2,900 பணியிடங்கள் நிரப்ப வேண்டும், உடற்கல்வி இயக்குநர் நிலை 1  மற்றும் நிலை 2 பணியிடங் களையும் நிரப்ப வேண் டும், உடற்கல்வி ஆசிரியர் களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் உடற் கல்வி இயக்குநர் பணி யிடங்கள் வழங்கி முழுத்  தகுதி பெற்ற உடற்கல்வி  ஆசிரியர்கள் மற்றும் உடற் கல்வி இயக்குநர் நிலை 2இல் உள்ளவர்களுக்கு பணி  உயர்வு வழங்க வேண்டும். 2008-2009ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியி டத்தை முதுகலை பட்ட தாரி ஆசிரியர் (உடற்கல்வி) எனவும் உடற்கல்வி இயக்கு நர் நிலை 2 பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் (உடற்கல்வி) என்றும் அறிவித்த அரசாணையை வெளியிட்டு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் சட்டத்தின்  படி அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்க ளுக்கும், சிறப்பு ஆசிரியர்க ளுக்கும் 10 விழுக்காடு முது கலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப்பெருமாள் தலைமை தாங்கினார். அரிபட்  அண்ணாமலை ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து  பேசினார். பொதுச் செயலா ளர் ஆர்.ரத்தினகுமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சகோதர சங்க நிர்வாகிகள் சாந்தகுமார், ம.அந்தோணிசாமி, தாயு மானவன், நாகராஜன், சபாநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்ன தாக சென்னை மாவட்டச்  செயலாளர் ஆரோக்கிய தாஸ் வரவேற்றார். திரு வள்ளூர் மாவட்டச் செயலா ளர் கணேசன் நன்றி கூறினார். இதில் தலைமை நிலை யச் செயலாளர்  லிங்கே சன், மாநில பொருளாளர்  மா.மு.சதீஷ், செயல் தலை வர் செல்வகுமார் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.