tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் போராட்டம்

திருநெல்வேலி, பிப்.4- மருத்துவ விடுப்புக்கு ஆப்சென்ட் போடக் கூடாது. விடுப்பு-வார விடுப்பு மறுக் கக் கூடாது. தொடர்ந்து பணி யாற்றக் கட்டாயப்படுத்தக் கூடாது. காலிப் பணியிடங்க ளை புதிய பணியாளர்கள் மூலம் நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணார் பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (சிஐடியு) தொழிலாளர்  சங்கம்- அரசு விரைவு போ க்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இசக்கி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஜோதி, மாநில துணைப் பொது செயலாளர் சுதர்சிங், அருண், பொன் ராஜ், டேவிட் ராஜா,   சரவண குமார், கருப்பசாமி, பிச்ச மணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழி லாளர்  சங்க மாவட்டத் தலை வர் காமராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். முருகன். மாவட்டப் பொரு ளாளர் ராஜன், பணிமனை செயலாளர் முருகன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.